செவ்வாய், 21 டிசம்பர், 2010

அநீதிகளைச் சட்டமாக்கும் முயற்சி -பிருந்தா காரத் எம்.பி.

உணவுப் பாதுகாப்புச் சட்டமுன் வடிவிற்கானப் பரிந்துரைகளை இறுதிப் படுத்தியுள்ள தேசிய ஆலோசனைக் கவுன் சில் (சூயவiடியேட ஹனஎளைடிசல ஊடிரnஉடை) தன் அறிக்கை யை அளிப்பதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்புதான் 2010க்கான உலகப் பட்டினி குறித்த அட்டவணை அறிக்கை (ழுடடியெட ழரபேநச ஐனேநஒ சுநயீடிசவ) வெளியாகி இருக்கிறது. அதில் பட்டினிக் கொடுமை மிகவும் மோசமாகவுள்ள 84 வளர்முக நாடுகளில் இந்தியா 67ஆவது இடத்தில் அங்கம் வகிக்கிறது. ருவாண்டா, சூடான் போன்ற நாடுகளைவிட மோசமான அளவில் இந்தியா இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், சோனியா காந்தி தலைமையில் இயங்கும் தேசிய ஆலோசனைக் கவுன்சில் இந்த எதார்த்த உண்மை குறித்து கிஞ்சிற்றும் கவலைப் பட்டதாகத் தெரிய வில்லை. தற்போது இறுதிப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டிருக் கிற பரிந்துரைகள், உணவுப் பாதுகாப்புக்குத் தேவையான சட்ட வடிவத்தை உத்தரவாதப் படுத்தக்கூடிய விதத்தில் இல்லாதது மட்டு மல்ல, பல பரிந்துரைகள் நல்லது செய்வதற் குப் பதிலாகத் தீமை விளைவிக்கக் கூடி யவைகளாகவே இருக்கின்றன. இதில் மிக வும் மோசமானது, அது அனைவருக்குமான பொது விநியோகமுறையை நிராகரித்திருப் பதும், வறுமைக்கோட்டிற்கு மேல் / வறுமைக்கோட்டிற்குக் கீழ் என்கிற பொது விநியோக முறையையே ஏற்றுக்கொண் டிருப்பதுமாகும். இந்த ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், இனிமேல் இந் தியாவில் அனைவருக்குமான பொது விநியோகமுறை என்பது சட்டப்படி இல்லை என்றாகிவிடும்.

தேசிய ஆலோசனைக் கவுன்சிலின் பரிந்துரைகள் மேலும் பல பிரச்சனைகளை உருவாக்கியுள்ளன. கவுன்சில், அரசாங்கம் மேற்கொண்டுவரும் ஏழைமக்களுக்கு எதி ரான நடவடிக்கைகளுக்கு எதிராக அறிவுரை கள் சொல்வதற்குப் பதிலாக, அவற்றை முழு மையாக ஏற்றுக்கொண்டு, பரிந்துரைகளை அளித்திருக்கிறது. அதுமட்டுமல்ல, அரசாங் கத்தின் ஏழை மக்களுக்கு விரோதமான நட வடிக்கைகளை மக்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக, தன்னுடைய மக்கள் விரோத பரிந்துரைகளின்மேல் நளினமான வார்த்தைகளைப் பயன்படுத்தித் தந்திருக் கிறது. குழுவில் இருந்தவர்களில் பொருளா தார நிபுணர் ஜீன் டிரேஸ் (துநயn னுசநணந) தவிர மற்ற அனைவருமே உணவுப் பாதுகாப்புக் குத் தேவையான அடிப்படைத் தேவைகள் குறித்துக் கவலைப்படாமல் அரசின் கொள்கைகளோடு சமரசமாகிவிட்டார்கள்.

பரிந்துரைகளின் விவரங்கள் வருமாறு:
(1) வறுமைக்கோட்டிற்குக் கீழ் / வறுமைக் கோட்டிற்கு மேல் பொது விநியோக முறை என்பது நளினமான பெயர்களில் தொடரும். இவ்வாறு வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்கள் ‘முன்னுரிமைப் பிரிவினர்’ களாக (ஞளு - யீசiடிசவைல ளநஉவiடிளே) மாறுவார்கள். வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் ‘பொதுப் பிரிவினர்’ (ழுநநேசயட ளநஉவiடிளே) என்று பெயரிடப் படுவார்கள். (2) முன்னுரிமைப் பிரிவினர் கிராமப்புற இந்தியாவில் 46 விழுக் காட்டினராகவும், நகர்ப்புறத்தில் 28 விழுக் காட்டினராகவும் இருப்பார்கள். (3) பொதுப் பிரிவினர் கிராமப் பகுதிகளில் 44 விழுக்காட் டினராகவும், நகர்ப் பகுதிகளில் 22 விழுக்காட் டினராகவும் இருப்பார்கள். (4) ஒரு குடும் பத்தை முன்னுரிமைப் பிரிவில் சேர்ப்பதா, பொதுப் பிரிவில் சேர்ப்பதா என்பது அரசாங்கத்தின் முடிவுக்கு விடப்படுகிறது. (5) திட்டக் கமிஷனின் 2004-2005 வறுமை மதிப்பீடுகளின் அடிப்படையில் மாநில வாரியான கிராமப்புற மக்களின் கணக்குகள் சரிசெய்து கொள்ளப்படும். (6) முன்னுரிமைப் பிரிவினர் 35 கிலோ கிராம் உணவுதானியங் களை, அரிசி ஒரு கிலோவிற்கு 3 ரூபாய் என்ற விதத்திலும், கோதுமை ஒரு கிலோ 2 ரூபாய் என்ற விதத்திலும், தினைப் பொருட்கள் (அடைடநவள) ஒரு கிலோவிற்கு 1 ரூபாய் என்ற விதத்திலும் பெற உரிமையுடையவர்கள். (7) பொதுப் பிரிவினர் 20 கிலோ கிராம் பெற உரிமையுடையவர்கள். ஆனால் விலைகள் சம்பந்தப்பட்ட தானியங்களுக்காக விவசாயி களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையில் 50 விழுக்காட்டை விஞ்சாது இருக்க வேண்டும். (8) இவை படிப்படியாக சட்டரீதியாக அமல்படுத்தப்படும்.

மத்திய அரசின் அநீதியான அனைத்து முறைகளுக்கும் சட்டமுலாம்
தேசிய ஆலோசனைக் கவுன்சிலானது மத்திய அரசின் அநீதியான அனைத்து வித மான முறைகளுக்கும் சட்ட முலாம் பூசி யிருக்கிறது. நாட்டில் வறிய நிலையில் உள்ளவர்கள் குறித்து அரசின் பல்வேறு அங் கங்கள் பல்வேறு மதிப்பீடுகளை அளித்துள் ளன. திட்டக் கமிஷன், வறியவர்கள் 27 விழுக் காடு என்கிறது, டெண்டுல்கர் குழு 2003-2004இல் எடுத்த மதிப்பீட்டின்படி அது 37 விழுக்காடு ஆகும். சாக்சனா குழுவானது இதனை 50 விழுக்காடு என்கிறது. வாத்வா (றுயனாறய) குழுவானது, ஒரு நாளைக்கு 100 ரூபாய் கூட செலவழிக்க இயலாதவர்கள் 70 விழுக்காட்டினர் என்று கூறியிருக்கிறது. ஒரு நாளைக்கு 20 ரூபாய்கூட செலவழிக்க இயலாதவர்கள் நாட்டின் 77 விழுக்காட்டினர் இருப்பதாக அர்ஜூன் சென்குப்தா குழு அறிக்கை அளித்திருக்கிறது. ஆனால் இதில் எதனையும் தேசிய ஆலோசனைக் கவுன் சில் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக ஒரு புதிய எண்ணிக்கையை அது முன்வைத்திருக்கிறது. எந்த அடிப்படையில் தேசிய ஆலோசனைக் கவுன்சில் வறுமைக் கோட்டிற்குக் கீழான குடும்பங்களைத் தீர் மானித்தது என்பதே நம் கேள்வியாகும். அது கூறியுள்ள கணக்கிற்கு எந்த அறிவியல்ரீதி யான அடிப்படையும் கிடையாது.

வறுமைக் கோட்டிற்கு
மேல் உள்ளவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி
உணவு தானியங்கள் இருப்பு அதிகமாக இருப்பதை அடுத்து, வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு உணவுப் பொருள்கள் மானிய விலையில் அளிப்பதை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டும் என்று அரசாங்கம் வலி யுறுத்தி வருகிறது. திட்டக் கமிஷன் தன்னு டைய குறிப்பில் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கும் உணவுப் பொருள்கள் அளிப்பதாக இருந்தால், அவர்களுக்கான விலைகள், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள வர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை மற்றும் அளவு வேறாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது. தேசிய ஆலோச னைக் குழு இதனை ஏற்கவில்லை. மாறாக, வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு 20 கிலோ கிராம் உணவு தானியங்களை அளித்திடப் பரிந்துரைத்திருக்கிறது. இதற்கு உணவு தான்யங்கள் போதுமான அளவிற்கு இல்லை என்று கூறுவது தவறான வாத மாகும். வேண்டிய அளவிற்கு நாட்டில் உண வுப் பொருள்கள் உற்பத்தியாகின்றன. அரசு செய்ய வேண்டியதெல்லாம் அவற்றைக் கொள்முதல் செய்து, விநியோகிக்க வேண்டி யதுதான். இதில் மாநில அரசுகளுக்கும் பெரும் பங்கு உண்டு. இதில் பொறுப்பைத் தட்டிக் கழிக்க மத்திய அரசு முயல்வதே உண்மை யான பிரச்சனையாகும்.

இவ்வாறு தேசிய ஆலோசனைக் கவுன் சில், உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடி வின் மீது முற்றிலும் அதிருப்தியடையக் கூடிய விதத்தில் பரிந்துரைகளை அளித் திருக்கிறது. இருக்கின்ற பாகுபாடுகளை சட்டரீதியாக மாற்றுகிறது, புதிய பிரிவு களையும் மோதல்களையும் உருவாக்குகிறது, மாநில அரசுகளின் பங்களிப்பினைக் குறைக் கிறது.

உணவுப் பாதுகாப்புச் சட்டம் மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய விதத்தில் நியாய மானதாகவும், முழுமையானதாகவும் இருக்க வேண்டுமானால், அவை குறைந்தபட்சம் கீழ்க்கண்ட அம்சங்களையாவது கொண்டி ருக்க வேண்டும்.

1. வறுமைக் கோட்டிற்குக் கீழ் / வறுமைக் கோட்டிற்கு மேல் என்கிற பாகுபாடுகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.

2. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 35 கிலோ கிராம் உணவு தானியங்கள் உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும்.

3. உணவு தானியங்கள் கிலோ 2 ரூபாய் விலைக்கு நிர்ணயம் செய்யப்பட வேண்டும். தினைப் பொருட்கள் மற்றும் தானியங்கள் (அடைடநவள / உடியசளந பசயiளே) கிலோ 1 ரூபாய் என்ற விதத்தில் அளிக்கப்பட வேண்டும். ஏனெ னில் நாட்டின் பல மாநிலங்களில் மக்கள் இதனைப் பிரதான உணவாக எடுத்துக் கொள்கிறார்கள். இவை மிகவும் சத்தான உணவுமாகும்.

4. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற் றும் பள்ளிக்குச் செல்ல இருக்கும் குறைந்த வயது குழந்தைகள் உட்பட அனைவருக்கும் மதிய உணவை அளிப்பதை சட்டரீதியாக உத்தரவாதம் செய்திட வேண்டும். அதற் கேற்ற வகையில் ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து மையங்களுக்கு உணவுப் பொருள் களின் ஒதுக்கீட்டை உத்தரவாதம் செய்திட வேண்டும்.

5. பல மாநில அரசுகள் செய்வதுபோல் மேலும் பல அத்தியாவசியப் பொருள்களை கட்டுப்பாட்டு விலையில் அளிப்பதை உத்தரவாதம் செய்திட வேண்டும்.

-தமிழில்: ச.வீரமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக