புதன், 10 நவம்பர், 2010

கனவோடு போகிறது தொழிலாளி வாழ்க்கை! - மாலதி சிட்டிபாபு

பிஒய்டி தொழிற்சாலை - அதாவது “உங்கள் கனவுகளை நிஜ மாக்குங்கள்” என்பது நிறுவனத்தின் பெயர். இந்நிறுவனமும் ‘பாக்ஸ்கான்’ போல நோக் கியா கம்பெனிக்கு செல்ஃபோனுக்கான பிளாஸ்டிக் மற்றும் உலோகத்தாலான மேலு றையை தயாரித்து சப்ளை செய்து வருகிறது.

இக்கம்பெனியில் பணியில் சேர்ந்தால் கைநிறைய சம்பளம் கிடைக்கும்; வாழ்க்கை வளம் பெறும் என்ற கனவுகளோடு நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் ஏஜெண்டுகளி டம் ரூ.25,000, ரூ.30,000, ரூ.50,000 ஒரு லட் சம் ரூபாய் கூட முன்பணம் கொடுத்து பணி யில் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் எதிர்பார்த் தபடி எதுவும் நடக்கவில்லை. மாறாக பல் வேறு பிரச்னைகளைத்தான் அவர்கள் சந் தித்தார்கள்.

6 மாதங்கள் பணி முடித்தவுடன் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை நம்பினார்கள். நிரந்தரம் எட்டாக்கனியாகவே உள்ளது. 8 மணிநேர வேலை, பணி நிரந்தரம், அடிப்படை வசதிகள், நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் உரிமை - என்று சில அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து அக்டோபர் 21 அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. தொழிலாளர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள். பிரேம் என்ற தொழி லாளி தற்கொலை செய்து கொள்ள முயற் சித்து, சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு தொழிலாளி வெளியே அனுப்பப்பட்டார்.

மீண்டும் அக்டோபர் 28ந் தேதி முதல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் கள். தற்பொழுது கம்பெனி நிர்வாகம் 437 பேரை சஸ்பென்ட் செய்துள்ளது. சட்டவிரோத மான லாக்-அவுட்டை அறிவித்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர் களின் நிலைமைகளைப் பற்றி ஆய்வு மேற் கொண்டு வரும் மதுமிதா, சந்திரிகா ஆகியோ ருடன் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப் புக்குழு மாநில அமைப்பாளர் மாலதி சிட்டி பாபுவும் (கட்டுரையாளர்), இணை அமைப் பாளர் டி.ஏ.லதாவும் சென்று அந்த தொழி லாளர்களை சந்தித்தனர். அப்போது அவர் கள், குறிப்பாக பெண் தொழிலாளர்கள் கூறிய விஷயங்கள்:

பணியாற்றுபவர்களில் அதிகம் பேர் கிருஷ்ணகிரி, குமரி மாவட்டங்களிலிருந்து வந்துள்ளார்கள். ஒரு சிலர் சென்னையை சுற்றியுள்ள இடங்களிலிருந்து வருகிறார்கள். 18 - 25 வயதுள்ள இளம் ஆண், பெண் தொழி லாளர்கள் 12 மணி நேரம் பணியாற்றுகிறார்கள்.

12 மணி நேர ஷிஃப்டில் 5 லட்சம் கவர் கள் தயாரிக்கப்படுகின்றன. 13 தொழிலாளிகள் 1 மணி நேரத்தில் 760 பீஸ்களை தயாரித்து விடுகின்றனர். கைபேசியின் மேல் கவரை மாடலுக்கேற்ப இணைத்து தயாரிக்கும் பிரிவில் பெண்களே அதிகம். அவசரம் என் றால் கூட மாற்றுத் தொழிலாளி வராமல் அப்பெண் தொழிலாளி அவ்விடத்தை விட்டு கழிப்பறைக்குக் கூட செல்லமுடியாத அவ லம். மிஷினிலிருந்து நேரடியாக எடுக்கும் மேலுறையை அவர்கள் தொடுவதால் உள் ளங்கைகளில் சுடு கொப்பளங்கள் ஏற்படுவது சகஜமாக உள்ளது.

இவர்கள் காலை 8 மணிக்கு கம்பெனிக் குள் நுழைய வேண்டும். இரவு 8 மணிக்குத் தான் வெளியே வருவார்கள். மறு ஷிஃப்ட் இரவு 8 மணிக்கு உள்ளே சென்று காலை 8 மணிக்கு வெளியே வருகிறார்கள். 5 - 10 நிமிடம் தாமதமாக வந்தால்கூட சம்பளப் பிடித்தம்.

காலையில் கொடுக்கப்படும் சிற்றுண்டி யில் புழு. டீ என்னும் பெயரில் வெறும் சுடு தண்ணீர்தான். மதியம் கொடுக்கப்படும் சாப் பாடும் சாப்பிட முடியாது. சாப்பாட்டில் பல்லி விழுந்திருந்தால் கூட பல்லியை எடுத்துப் போட்டு விட்டு சாப்பிட வேண்டும். இரவில் கொடுக்கப்படும் ஹார்லிக்ஸ் இதே நிலை தான். குடிக்கக் கொடுக்கும் தண்ணீரில் அள வுக்கு அதிகமான குளோரினைக் கலந்து வைப்பதால் குடிக்க முடிவதில்லை. குடிக்க லாயக்கில்லை.

டீ இடைவேளை 10 நிமிடங்கள். உணவு இடைவேளை அரை மணிநேரம். இதைத் தவிர எந்தக் காரணத்தை முன்னிட்டும் வேறு இடைவேளை கிடையாது. ஒரு ஷிஃப்டில் 200 பெண் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கழிப்பறைகள் 4 தான். அதையும் டீ, உணவு இடைவேளையில் தான் பயன்படுத்த வேண்டும். இயற்கை உபா தையைக்கூட சுதந்திரமாகக் கழிக்க முடியாது.

பெண்களுக்கென்று மாதந்தோறும் வரும் மாதவிடாய்க் காலத்தில் கூட ஒரு 10 நிமிடம் கழிப்பறைக்கு செல்ல அனுமதி வாங்க அவர்கள் படும்பாடு; இதை விளக்க முற்படும் பொழுது அப்பெண்களின் கண்களில் கண்ணீர் கொப்பளிக்கிறது.

சுதந்திர நாட்டில் தான் வாழ்கிறோமா! பெண் பெருமை பேசி பேசி காலம் கழிக்கும் மாபெரும் தலைவர்கள் உலாவரும் இத்தமிழ்த் திருநாட்டிலே காலூன்றி, கொள்ளை லாபத் தை நோக்கமாகக் கொண்டு சுரண்டும் பன் னாட்டு நிறுவனத்திலே நம் வீட்டு பெண் பிள் ளைகள் படும்பாடு?!?!

பெண்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தவுடன் தியாகு என்ற சூப்பர்வைசர் அப்பெண்களைப் பார்த்து “நீங்கள் மூன்றுநாள் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் மூன்று மாதங் கழித்து வாந்தி எடுப்பீர்கள்” என்று கூறியிருக் கிறான். அவனை என்ன செய்வது! பெண் தொழிலாளர்களை இதைவிட மட்டமான ஆபாச வார்த்தைகளால் நோகடிக்க முடியாது.

கேட் அருகே விடிய விடிய

இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘ரூபா’ என்ற பெண் தொழிலாளி இரவு ஷிஃப்டிற்கு சரியாக 8 மணிக்கு பதில் அரைமணி நேரம் காலதாமதமாக சென்றிருக்கிறார். அரைமணி நேரம் காலதாமதமாக வந்ததால் அவரை பணிநீக்கம் செய்து விட்டதாக, இரவு நேரம் என்று கூட பார்க்காமல், கம்பெனியை விட்டு வெளியேறச் சொல்லியிருக்கிறது நிர்வாகம். வெளியேறச் சொன்னது மட்டுமல்லாமல் செக்யூரிட்டியிடமும் அப்பெண்ணை எந்தக் காரணத்தை முன்னிட்டும் உள்ளே அனு மதிக்கக்கூடாது என்று எச்சரித்து உள்ளது. என்னே மனிதாபிமானம்! திரும்பச் செல்லப் போக்குவரத்து வசதி இல்லை. 4 கிலோ மீட்டர் நடந்து சென்றால்தான் ஏதாவது வண்டியை பிடிக்கமுடியும். இரவு நேரத்தில் அதுவும் கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. பாவம் என்ன செய்வாள் அப்பெண், அந்தக் கம்பெனியின் கேட் அருகில் விடிய விடிய உட்கார்ந்து உள்ளார்.

மற்றொரு பெண் தொழிலாளி ‘பூவிழி’; தன் சகோதரி இறந்துவிட்டார், காரியத்திற்குச் செல்ல அனுமதி கேட்ட பொழுது அனுமதி வழங்கப்படவில்லை. காரியத்தைத் தள்ளி வைக்கச் சொன்னார்கள். அந்த தொழிலாளி லீவு போட்டு சென்றுள்ளார். லீவு போட்ட தற்கு எச்சரிக்கை ஓலை (றயசniபே டநவவநச) கொடுக்கப்பட்டது.

தேசிய விடுமுறையன்று கூட இரவு ஷிஃப்டில் வந்து பணிபுரிய வேண்டும். உற்பத்தி ஒன்றே குறிக்கோள். கை கால் வலி, தலைவலி, இடுப்புவலி என்று ஒரு 5 நிமிடம் எழுந்து நின்றால், அவர்களை எழுத முடியாத ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவது.

காண்ட்ராக்டர்களிடம் பணம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்தவர்கள் பலர் சரியான சம்பளம் கிடைக்காததாலும், பணிச்சூழலை சகித்துக்கொள்ளமுடியாமலும் வெளியேறி விட்டனர். அவர்கள் கொடுத்த பணமும் திரும்பக் கிடைக்கவில்லை.

லாபம் ஒன்றே பிரதான நோக்கமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தில் தொழி லாளர் நலச் சட்டங்கள் அமலாக்கப்பட வில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பணிபுரியும் 4000 தொழிலாளர்களில் 800 பேர்தான் நிரந்தரத் தொழிலாளிகள். நிரந்தரத் தொழிலாளிக்கும் காண்ட்ராக்ட் தொழிலாளிக் கும் பணியில் எவ்வித வித்தியாசமும் இல்லை.

சில தொழிலாளிகளுக்கு கைகளில் விரல் நசுங்குவது சர்வசாதாரணமாக நடக் கிறது. தீப்புண் காயங்கள் தவிர்க்க வழங்கப் படும் கையுறைகள் தரமானவையாக இல்லை; நாலைந்து நாட்களுக்கு மேல் பயனற்றுப் போய்விடுவதால் உள்ளங்கைகளில் கொப்பு ளங்கள் ஏற்படுவது சகஜமாக உள்ளது.

வறுமையின் காரணமாக பிழைப்புத்தேடி பன்னாட்டு நிறுவனத்தில் பணியில் சேரும் தொழிலாளர்கள், தங்கள் எலும்புகள் நொறுங்க கொடுக்கும் உழைப்பின் பலன் கோடிகளாக மாறி முதலாளிகளின் கல்லாப்பெட்டியை நிரப்புகின்றது!

பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தால் கண்ணியமான வாழ்க்கை நடத்தலாம் என்ற எண்ணம் கனவாகி, இந்த இளம் தொழிலாளி களின் ஆசைகள் நிராசை ஆகின்றன!

பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை களை பல்வேறு வடிவங்களில் வாரிவழங்கும் தமிழக அரசு, அந்நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்குமா!?!

கொத்தடிமைகளாக நடத்தப்படும் இந்த இளம் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக் கையில் இனியேனும் இறங்குமா தொழிலாளர் நலத் துறை!

(கட்டுரையாளர், உழைக்கும் பெண்கள் ஓருங்கிணைப்புக்குழு அமைப்பாளர், தமிழ்நாடு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக