புதன், 10 நவம்பர், 2010

‘சந்தை’க்கு எதிரானவர்கள் அல்ல! - பிரகாஷ் காரத்

புகழ்மிக்க கல்வியாளர்களை உரு வாக்கிய சென்னை கிறிஸ்தவக் கல்லூரி.

அக்டோபர் 30 மாலை வேளை.

1965 காலகட்டத்தில், தான் பி.ஏ. படித்த நினைவுகளை அசைபோட்ட வாறு, பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த அந்த சிறப்புச் சொற்பொழி வில் பங்கேற்றார் பிரகாஷ் காரத்.

பெரும் மரியாதைக்குரிய நமது பழைய மாணவர் பிரகாஷ் காரத், “சந்தைப் பொருளாதாரம் மற்றும் அந்நிய முதலீடு” என்ற பொருளில் உரையாற்றுவார் என்று கிறிஸ்தவக்கல்லூரி பழைய மாணவர் சங்க சென்னை பிரிவு அறிவித்திருந்தது.

சங்கத்தின் நிர்வாகிகளான ரெவி தாமஸ், போத்தன் செரியன், கே.எம்.மம் மன் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் அலெக்சாண்டர் ஜேசுதாசன் ஆகியோ ரும், கல்வியில் சிறந்த பேராசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்ற அந்த சந்திப் பில், மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இந்தியாவின் உண்மை முகம் என்ன என்பதை எடுத்துரைத்தார் பிர காஷ் காரத்.

இந்தக் கல்லூரியில் அக்காலத்தில் மாணவர்களோடு நண்பர்களாகப் பழகி, அனைத்தையும் கற்றுக்கொடுத்த தலை சிறந்த பேராசிரியர்களின் மதிப்புமிக்க மாணவராக விளங்கியவர் பிரகாஷ் காரத். பின்னாளில் இங்கிலாந்தில் உள்ள எடின் பர்க் பல்கலைக்கழகத்திற்கு சென்று ஆய்வுப்படிப்பு மேற்கொள்ள வழிகாட்டிய சென்னை கிறிஸ்தவக்கல்லூரி அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியர் ரெவ ரண்ட். டங்கன் பாரஸ்டர், ஆங்கில இலக் கியப் பேராசிரியர் ஜே.வசந்தன் போன்ற வர்களை பெரிதும் மதிக்கும் காரத், இன் றைக்கு இந்தியாவின் சிறந்த எதிர்காலத் திற்கு உரிய வழி கூறும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாள ராக அந்த அரங்கில் நின்றார்.

இந்திய அரசியலில், கூட்டாட்சி எனும் கட்டமைப்பில் மத்திய-மாநில உறவுகளை மறுசீரமைக்க வேண்டியுள் ளது என்பதில் துவங்கி, சந்தை என்பதை மார்க்சிஸ்ட்டுகள் எதிர்க்கிறார்களா என்பது வரையிலும் அரசியல், தத்து வார்த்த கருத்துக்களை எடுத்துரைத்தார்.

.... இன்றைய இந்திய அரசியல் கட்ட மைப்பில் அதிகாரங்கள் மைய அரசிடம் குவிந்திருக்கிற நிலையே இருக்கிறது. மாநிலங்களுக்கு போதுமான அதிகா ரமோ, கூடுதல் சுயாட்சி அதிகாரமோ செயல்வடிவம் பெறவில்லை. அடிப் படையான நிதிக்கொள்கையை உருவாக் குவதிலோ அல்லது இதர பல முக்கிய பிரச்சனைகளிலோ முடிவெடுக்கும் அதிகாரம் போதுமான அளவிற்கு மாநிலங் களின் கைகளில் இல்லை. வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு மத் திய அரசிடமிருந்து கிடைக்கும் வரி களின் பங்குத்தொகையையே பெரும் பாலும் நம்பியிருக்கவேண்டியுள்ளது என்று பிரகாஷ் காரத் கூறினார்.

அனைத்து மாநிலங்களுக்குமான இந்த நிலை, இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றும், இடதுசாரிகளின் தலைமையிலான மாநிலங்களுக்கு கூடுதல் சுயாட்சியு மில்லை; போதுமான நிதி ஒதுக்கீடும் இல்லை என்ற சூழலில், நாடாளுமன் றத்தில் இடதுசாரிகளின் பலம் குறைந் துள்ள நிலையில், வளர்ச்சிக்கான மாற் றுக்கொள்கைகளை முன்வைக்க மட் டுமே முடியும் என்ற நிலை ஏற்பட்டுள் ளது என்றும் பிரகாஷ் காரத் சுட்டிக்காட் டினார். தேசிய அளவில் வளர்ச்சிக்கான மாற்றுக்கொள்கைகளை உறுதிபட வலியுறுத்தினாலும், மேற்குவங்கம், கேர ளம் போன்ற இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மாநிலங்களில், ஒட்டுமொத்த இந்தியாவிலும் அமலில் இருக்கும் கட்டமைப்புக்கு உட்பட்டே செயல்படவேண்டியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய அளவிலும், இடதுசாரிகள் ஆட்சி நடக்கும் மாநிலங்களிலும் இடது சாரிகள் மேற்கொள்ளும் நிலைபாட்டை பற்றி விளக்கிய பிரகாஷ் காரத், சந்தை என்பதையே மார்க்சிஸ்டுகள் எதிர்க் கிறார்கள் என்ற கருத்தோட்டத்தை நிராகரித்தார். சந்தை என்பதையோ, அந்நிய நேரடி முதலீடு என்பதையோ கண்மூடித்தனமாக எதிர்க்கிறோம் என்ற கருத்து, மார்க்சிஸ்ட்டுகளைப் பற்றி தவறான முறையில் சித்தரிப்பதற்காக உருவாக்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

“சோசலிசத்தை கட்டமைப்பது என் பதற்கான பணிகளில் எங்களது அனு பவம், சோசலிச அமைப்புமுறையிலும் சந்தை என்பதன் செயல்பாடு எப்படிப் பட்டது என்பதை புரிந்துகொள்ளச் செய் திருக்கிறது... சந்தை என்பதை நிரா கரித்தோமானால், அல்லது சந்தை என் பதை ஒரு திட்டமிட்டபொருளாதாரத் துடன் ஒருங்கிணைப்பதில் தவறி ழைத்தோமானால், சோவியத் ஒன்றியத் தைப்போல, சிக்கலில் மாட்டிக்கொள் வோம்” என்று பிரகாஷ் காரத் கூறினார்.

இதை சீனா புரிந்துகொண்டிருக் கிறது. 1970களிலேயே தனது நிர்ணயிப்பு களை மாற்றிக்கொண்ட சீனா, வெற்றி கரமாக ஒரு சோசலிச சந்தைப்பொருளா தாரத்தை கட்டமைத்துக் கொண்டிருக் கிறது. மையப்படுத்தப்பட்ட திட்டத்தை அது கைவிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்நிய மூலதனத்தைப் பொறுத்த வரை, அது வருவதை எதிர்ப்பதாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் கூறியதில்லை. உண்மையில், கட்சித் திட்டம், அந்நிய நேரடி முதலீடுகள் உள்ளே வருவதால் உற்பத்தி நடவடிக்கை களில் ஏற்படும் சாதகமான விளைவு களுக்கும், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் போன்ற துறைகளை ஊக வணிகத்தில் தள்ளும் நிதி முதலீடுகளை தங்குதடை யின்றி திறந்துவிடுவதற்கும் இடையில் இருக்கும் மிகத்தெளிவான வேறுபாட் டை சுட்டிக்காட்டியுள்ளது என்று கூறிய பிரகாஷ்காரத், “எந்தத் துறைகளில் அந் நிய நேரடி முதலீடு தேவைப்படுகிறது என்பதையும், எந்தத்துறைகள் ஒழுங் காற்று செய்யப்பட வேண்டும் என்பதை யும் நாம் தீர்மானிக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

உலகம் முழுவதிலும் கடும் தாக்கத் தை ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார நெருக்கடியிலும் கூட இந்தியா பிழைத் துக்கொண்டது; மொத்த உள்நாட்டு உற் பத்தி வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; நமது கேள்வி என்னவென்றால், இந்த வளர்ச்சி நாட்டிற்கு தேவையான மிகச்சரி யான வளர்ச்சிதானா, நாட்டின் ஒட்டு மொத்த மக்களுக்கும் பலனளிக்கக் கூடிய வளர்ச்சிதானா என்பதே ஆகும் என்றும் அவர் கூறினார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை பற்றி மட்டுமே பிரதானப் படுத்தி பேசுவது, நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தைப் பற்றிய திரிக்கப்பட்ட ஒரு சித்திரத்தையே காட்டும்; உண்மை யில் இந்த வளர்ச்சி விகிதத்தால் பல னடைந்தவர்கள் மிகச்சிலரே என்ற உண் மையை சுட்டிக்காட்டிய பிரகாஷ் காரத், “கோடிக்கணக்கான டாலர்களை சம் பாதித்துக்கொண்டிருக்கும் மிகப்பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை வளர்ச்சி விகிதத்தில் இந்தியா வேகமாக முன் னேறிக்கொண்டிருக்கிறது. உலகிலேயே மிகப்பெரும் பணக்காரர்களில் சிலரைக் கொண்ட நாடாக இந்தியா வளர்ந்திருக் கிறது; அதே நேரத்தில் மிகப்பெரும் எண் ணிக்கையில் ஏழைகளையும் கொண் டிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது” என்றும் பிரகாஷ் காரத் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக