செவ்வாய், 12 அக்டோபர், 2010

அயோத்தி தீர்ப்பும் சங்பரிவாரமும் -அசோகன் முத்துசாமி

பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்கிற வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு எப்படி பார்த்தாலும் சங்பரிவாரத்திற்குச் சாதகமானது தான். முழு வெற்றி இல்லை என்றாலும் அவர்களுக்கு இது வெற்றிதான்.

யாருக்கும் வெற்றியோ தோல்வியோ இல்லை என்று ஆர்எஸ்எஸ்-ஸின் சர்சங் சாலக் மோகன் பகவத் கூறியிருக்கின்றார். தீர்ப்பு வேறு மாதிரி வந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் தேவையில்லை. ஏனெனில், அயோத்தியில் ராமருக்குக் கோவில் கட்ட உதவுவதன் மூலம் முஸ்லிம்கள் தங்களது தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என அவர் ஏற்கனவே கூறியிருக்கின்றார் (தி ஹிந்து, 16.9.10). தொடர்ந்து பல காலமாக சங்பரிவாரம் அதைக் கூறிக் கொண்டேதான் இருக்கின்றது.

சங்பரிவாரங்களுக்கு உதவுவதுதான் தேசபக்தி என்றால், அதன் உள்ளிடை பொருள் என்ன என்பதை யோசிக்க வேண்டும். இது முஸ்லிம்களுக்கு எதிரானது மட்டுமல்ல. பொதுவாக, கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினருக்கும், மதச்சார்பற்ற ஜன நாயக சக்திகளுக்கும், எந்த மதப்பற்றும் இல் லாத பகுத்தறிவுவாதிகளுக்கும் எதிரானது. ஏனெனில், இவர்கள் அனைவருமே-இவர் களில் பிறப்பால் இந்துக்களாக உள்ளவர் களும் அடங்குவர்-சங்பரிவாரத்தின் வகுப்பு வாதத்திற்கு எதிரானவர்கள். சங்பரிவாரம் மசூ தியை இடித்ததை எதிர்ப்பவர்கள். மதச்சார் பற்ற தேசியத்தை வலியுறுத்துபவர்கள். பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது சங்பரிவாரம் கூறு வது போல் அனைத்து இந்துக்களின் கோரிக்கை அல்ல.

ஆனால், இதை இந்துக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று பிரவீன் தொகாடியா கூறியிருக் கின்றார். ‘இந்த தீர்ப்பு கடவுள் ராமருக்குக் கிடைத்த வெற்றி. சர்வதேச அளவில் 100 கோடி இந்துக்களுக்குக் கிடைத்த வெற்றி’ என்று துள்ளிக் குதித்துள்ளார் (தினமணி, 1.10.10).

இந்து மகாசபை மற்றும் ராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பாக வழக்காடிய வழக்கறி ஞர்கள், தீர்ப்பு வெளியானபோது வெற்றி என கைகைளை ஆட்டியதை தொலைக் காட்சி களில் பார்த்தோம். போதாக்குறைக்கு சில சாமியார்கள் கைகளை உயர்த்தி தங்களது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் புகைப்படங் களும் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. உத்தரப் பிரதேசத்தின் பல இடங்களில் விஸ்வ இந்து பரிஷத்தினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர். அரியானா மாநிலம் பிவானி பகுதியில் விஎச்பி வெற்றி ஊர்வலம் நடத்தியிருக்கின்றது. வேறு பல இடங்களி லும் இப்படி ஊர்வலங்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண் டிருக்கின்றன.

தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தொண்டர்கள் இனிப்பு வழங்கிக் கொண் டாடியுள்ளார்கள். ராமர் பிறந்ததும், பிறந்த இடமும் இந்த தீர்ப்பினால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதால், ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று தமிழக சங்பரிவாரிகள் குதூ கலித்துள்ளனர். மசூதி இடிப்புப் புகழ் உமாபாரதி, இது தன் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என்று தெரிவித்துள்ளார். இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் நிதானமாகச் செயல்பட வேண்டும் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார். மொத்தத்தில் சங்பரிவாரத்தின் பல பிரிவுகளின் தலைவர்களும் வெற்றிச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.

இது ஒரு சமரசத் தீர்ப்பு என்று பலர் கருதிக் கொண்டிருக்கின்றனர். மசூதி இருந்த இடத்தை மூன்றாகப் பிரித்து, வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பிற்கும் சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், மூன்றில் இரண்டு பகுதி அந்த இடத்தில் ராமருக்குக் கோவில் கட்ட வேண்டும் என்கிறவர்களுக்குப் போகின்றது. அப்போதும் சங்பரிவாரம் சமாதானமடையவில்லை. ஒரு பக்கம், அனை வரும் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண் டும் என்கிறது. மறுபக்கமோ, நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காமல் மேல்முறையீடு செய்யப் போவதாகக் கூறுகின்றது. அல்லது சமரசப் பேச்சு வார்த்தை நடத்தி சன்னி வக்பு வாரி யத்திற்கு என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மூன் றில் ஒரு பாகத்தை அபகரிக்க முயற்சிக்கின்றது.

‘தீர்ப்பு வெளியாகும் முன், நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன் மோகன் சிங் உள்பட பலர் அறிவுரை வழங் கினார்கள். இப்படி மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கியவர்கள் இந்த தீர்ப்பை மதிக்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று இனி நாட்டில் மதமோதல்கள் ஏற்படாத வகையில் அனைத்து தரப்பினரும் சேர்ந்து அயோத்தி யில் ராமருக்கு ஆலயம் அமைக்க வேண்டும். அதுவே பாஜகவின் இலக்கு’ என்று மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார் (தினமணி, மேகு இதழ்).

கோவில் கட்ட அனுமதிக்கவில்லை என் றால் மதக்கலவரங்கள் நடக்கும் என்பது இதன் உட்பொருள் என்பதைக் கூற வேண் டியதில்லை.

மக்களின் மத நம்பிக்கை விஷயத்தில் நீதிமன்றம் எப்படித் தலையிட முடியும், எப்படி தீர்ப்பு வழங்க முடியும் என்றவர்கள்தான் இவர்கள். தங்களுக்கு எதிராக இருந்தால் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்றவர்கள்தான் இவர்கள். மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று பிரதமர் மன் மோகன்சிங் கூறியதை பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் ‘வெட்கக்கேடு’ என்று வர்ணித்தார் (தி ஹிந்து, 30.9.10).

மறுபக்கமோ, மூன்றாகப் பிரித்ததை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக இந்து மகாசபை தெரிவித்துள்ளது. அதாவது அந்த இடத்தை மொத்தமாக தங்களிடம் கொடுக்க வேண்டும் என்று முறையிடப் போகின்றார்கள். அத்துடன் மசூதி இருந்த இடத்தில் ‘பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டுவதற்கு’ இந்த தீர்ப்பு வழிவகுத்துள்ளது என்று சங்பரிவாரத் தலைவர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர். பிரம்மாண்ட என்கிற சொல்லைக் கவனிக்கவும். ஒரு ஏக்கருக்கும் குறைவான இடத்தில் எப்படி பிரம்மாண்ட மான கோவில் கட்டுவார்கள்? அல்லது கோவில் கட்ட வேண்டும் என்று நீண்ட கால மாகக் கூறிக் கொண்டிருக்கும் நிர்மோஹி அகாடா என்கிற அமைப்பிற்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ள ஒரு பாகத்தையும் சேர்த்தால் கூட இரண்டு ஏக் கருக்கும் குறைவாகத்தான் வரும். அதில் பிரம் மாண்டம் என்பது சன்னி வக்பு வாரியத்திற்கு ஒதுக்கப்படும் இடத்தையும் சேர்த்தால்தான் சாத்தியம் என்பதை மறக்க வேண்டாம். இன் னும் சொல்லப் போனால் சங்பரிவாரங் களுக்கு அதுவும் போதாது. பக்கத்தில் இருக் கும் இடத்தையும் சேர்த்து குறிவைப்பார்கள்.

“எங்களது நிலை சரியென்று நிரூபண மாகியுள்ளது. ராமர் சிலை இருக்கும் 110 அடி நீளமும் 90 அடி அகலமும் கொண்ட நிலம் ராமர் பிறந்த இடம் என்று தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது. இது ஒரு பிரம்மாண்ட கோவி லுக்கு வழிவகுத்துள்ளது. பிரம்மாண்டமான கோவிலுக்கு சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலம் எங்களுக்குத் தேவைப்படுகின்றது. அதில் ஒரு பகுதியை யாருக்காவது விட்டுக் கொடுப்பது என்கிற கேள்விக்கு இடமிருக்கிறதா என்ன?’’ என்று தொகாடியா கேட்கின்றார். (பிரன்ட்லைன், அக்.22, 2010).

சங்பரிவாரத்தைப் பொறுத்தவரையில் வழக்கில் வெற்றியோ, தோல்வியோ அதை தனது இந்து வகுப்புவாத நிகழ்ச்சி நிரலுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும். தீர்ப்பு அவர்களுக்கு எதிராக வந்திருந்தால் கோவில் கட்டுவதை நீதிமன்றம் தடுக்கின்றது, முஸ்லிம்கள் தடுக் கின்றார்கள் என்று கலவரம் செய்திருப்பார்கள். இப்போது சன்னி வக்பு வாரியம் அதன் பங்கை விட்டுக் கொடுக்கவில்லை என்றால் முஸ் லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை மேலும் தீவிரமாக நடத்தத் தயங்காது. அதையே அரசாங்கத்திற்கு எதிரான கலவரமாகவும் மாற்றுவார்கள். ஏனெனில், அந்த 2.77 ஏக்கர் நிலம் இப்போது மத்திய அரசாங்கத்தின் வசம்தான் இருக்கின்றது.

எப்படி பார்த்தாலும் இந்த தீர்ப்பு பிரச் சனையை தீர்க்கவில்லை. சங்பரிவாரத்தின் கைகளை வலுப்படுத்தியிருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

சிலர், பிரச்சனையை இத்துடன் விட்டு விட்டு மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும், வாழ்க்கையில் எவ்வள வோ இருக்கின்றது என்கிறார்கள். ஆம், அது சரிதான். வாழ்க்கையில் இதைவிட எவ்வள வோ முக்கியமான பிரச்சனைகள் இருக் கின்றன. சங்பரிவாரமும் அப்படியே கூறி யிருந்தால் பரவாயில்லை. முஸ்லிம்கள் கடந்த காலத்தை மறந்துவிட வேண்டும் என்கிறார், மோகன் பகவத். மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார், அங்கு அவருக்கு ஒரு கோவில் கட்டப்பட்டிருந்தது, அதை இடித்துவிட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது, இந்த வரலாற்றுத் தவறை சரி செய்ய மசூதியை இடித்துவிட்டுக் கோவில் கட்ட வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் கூறிய போதெல்லாம் மதச்சார்பற்ற சக்திகள் அந்தப் பொய்யை ஏற்காதபோதும், கடந்த காலத்தை மறந்துவிடுங்கள் என்று மன்றாடி னார்கள். அப்போதெல்லாம் சங்பரிவாரம் அவர் களைப் பழித்தது. தேசத் துரோகிகள் என்றது. மரணதண்டனை விதிக்கப்படும் என்றது. இப்போது தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்த வுடன், கடந்த காலத்தை மறக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பிரிவின ரான முஸ்லிம்களை வலியுறுத்து கின்றது. சங்பரிவாரம் ஏன் அதையே செய்யக் கூடாது என்று நீதியரசர் ராஜேந்திர சச்சார் கேட் கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக