செவ்வாய், 12 அக்டோபர், 2010

அயோத்தி: கேள்விகளை எழுப்பும் உயர்நீதிமன்ற தீர்ப்பு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட லக்னோ பெஞ்ச், பாபர் மசூதி/ராமஜன்மபூமி நிலம் யாருக்குச் சொந்தம் என்று கடந்த அறு பதாண்டு காலமாக நடைபெற்று வந்த வழக்கில் தற்போது தீர்ப்பினை அளித் திருக்கிறது. கற்றறிந்த மூன்று நீதிபதி களும் தனித்தனித் தீர்ப்புரைகளைக் கொடுத்திருக்கிறார்கள். அவை ஆயிரக் கணக்கான பக்கங்களுக்கு வருகின்றன. தீர்ப்புரையின் சாரம் என்பது சட்டரீதியாக இருப்பதைவிட அரசியல்ரீதியாக இருப்ப தாகவே பலரும் கருதுகின்றனர். தீர்ப்பு பல கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக் கிறது. ஒரு நவீன மதச்சார்பற்ற ஜன நாயகக் குடியரசாக விளங்கும் நம் போன்ற தொரு நாட்டில் அத்தகைய கேள்வி களுக்கு விடை காண்பதற்கு உரிய இடம் உச்சநீதிமன்றம்தான். அங்கே உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக சட்டரீதியான மேல்முறையீடு செய்வதுதான்.

இந்தத் தாவாவின் மீது தீர்வு ஏற் படுவதற்கு ஒரே வழி உச்சநீதிமன்றம் அளித்திடும் தீர்ப்புதான் என்பது மக்க ளால் அநேகமாக ஏற்றுக்கொள்ளப்பட் டிருப்பதைக் காண முடிகிறது. இது வர வேற்கத்தக்க ஒன்று. நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படியும் இது மிகவும் சரியானதேயாகும்.

ஆயினும், நீதிமன்றங்களின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைகளை, நீதிமன்றங்கள் நம்பிக்கையின் அடிப் படையில் அளித்திடும் தீர்ப்புகளை எல் லாம் அப்படியே கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்று தவறாக வியாக்கியானம் செய் திடக்கூடாது. ஆனால் அவ்வாறுதான் திருவாளர் அத்வானி - நாட்டில் மதக் கலவரங்கள் மூலம் ரத்தக்களறியை ஏற் படுத்தி அதன் உச்ச கட்டமாக பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கும் காரணமாக இருந்த அத்வானி - ‘‘இப்போதைய நிலைமை என்பது நம்பிக்கை (எதிர்) சட்டம் என்பதல்ல, ‘மக்கள் நம்பிக்கை’ என்பது சட்டரீதியாக உயர்த்திப்பிடிக்கப் பட்டிருக்கிறது’’ என்று கூறக்கூடிய அளவிற்கு கொண்டு சென்றிருக்கிறது (“கூாந ளவைரயவiடிn nடி டடிபேநச ளை கயவைா எள டயற, வை ளை கயவைா ரயீாநடன லெ டயற”). அலகாபாத் உயர்நீதிமன்றம், பிரச்சனைக்குரிய இடம் யாருக்கும் சொந்தம் என்பது குறித்து தாக் கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களின் மீது தீர்ப்பு வழங்க வேண்டி இருந்தது. இந்த மனுக்கள் காலாவதியாகிப் போய் விட்டதாகக் கூறி ( வiஅந யெசசநன) தள்ளு படி செய்தபின், லக்னோ பெஞ்ச் இந்த இடம் குறித்து ‘நம்பிக்கை’ (‘கயவைா’ யனே ‘நெடநைக’) அடிப்படையில் இப்போது இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இது மேலும் பல ஆழமான வினாக்களை எழுப்பி யுள்ளது. உதாரணமாக, அந்த இடத்தி லிருந்த பாபர் மசூதி இடிக்கப்படாமல் இருந்திருந்தால், தீர்ப்பு இப்போது வந்திருப்பதுபோலவே வந்திருக்குமா? நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப் பட்ட மனுக்கள் அனைத்தும் பாபர் மசூதி இடிக்கப்படாதிருந்த சமயத்தில் பதிவு செய்யப்பட்டவைகளேயாகும். இப்போது இவ்வாறு வந்திருக்கும் தீர்ப்பானது, பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்து கிறதா? பாபர் மசூதி இடிப்புச் சம்பவ மானது, சர்வதேச அளவில் கண்டிக்கப் பட்டதொரு நடவடிக்கையாகும். நாட்டின் மதச்சார்பின்மை என்னும் சித் திரத்தையே உருக்குலைத்ததொரு செய லாகும்.

அதேபோன்று, அயோத்தி காவல் நிலையத்தின், காவல் உதவி ஆய்வாள ராக இருந்த ராம் துபே என்பவர், ‘1949 டிசம்பர் 22-23 இரவில் பாபர் மசூதியின் மத்திய மாடத்திற்குக் கீழே, ராமன் மற்றும் சீதையின் சிலைகளை 50-60 பேர் கொண்ட குழு ஒன்று கள்ளத்தனமாக வைத்தது’ என்று ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தாரே, அது என்னவாயிற்று? இதன்பின் நடைபெற்ற நிகழ்வுகளை உச்சநீதிமன்றம், தன்னு டைய இஸ்மாயில் பரூக்கி (எதிர்) இந்திய அரசு (1994) என்னும் வழக்கின் தீர்ப்பில் விவரமாகப் பதிவு செய்திருக்கிறது. நீதிமன்றங்கள் ‘நம்பிக்கை’ (‘கயவைா’ யனே ‘நெடநைக’) அடிப்படையிலான விஷயங் களில் தீர்ப்பு வழங்க முடியுமா?

தீர்ப்பு வெளியான பின்னர், முஸ்லிம் களுக்கு அளிக்கப்பட்டுள்ள மூன்றி லொரு பகுதியையும் அவர்கள் விட்டு விட்டு சென்றுவிட வேண்டும் என்றும், அந்த இடத்தில் ‘பெரிய அளவில் கோவில் கட்ட’ அனுமதித்திட, நட்புட னான சமரசத்துடன் (சநஉடிnஉடையைவiடிn) முன் வர வேண்டும் என்றும் நிர்ப்பந்தம் அளிப் பது தொடங்கிவிட்டது. தென் ஆப்பிரிக் காவில் அனைவராலும் வெறுத்து ஒதுக் கப்பட்ட இனஒடுக்கல் ஆட்சி தோற் கடிக்கப்பட்டபோது, நெல்சன் மண் டேலா அரசாங்கத்தின் முன் இதுபோன்ற தொரு பிரச்சனை எழுந்தது.

மனிதாபிமானமற்ற முறையில் குற்றங் களைப் புரிந்திட்ட கயவர்களுக்கும், அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே சமரசம் காணும் பிரச்சனை முன்வந்தது. மிக நீண்ட நெடிய விவாதத் திற்குப்பின், ஒவ்வொரு நிகழ்விலும் எது நீதியோ அதுவே சமரசத்திற்கு முன் நிபந்தனையாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு தான் அங்கே உண்மை மற்றும் சமரச ஆணையம் (கூசரவா யனே சுநஉடிnஉடையைவiடிn ஊடிஅஅளைளiடிn) அமைக்கப்பட்டது.

உண்மை என்னவெனில், பாபர் மசூதி அந்த இடத்தில் நானூறு ஆண்டுகளுக் கும் மேலாக இருந்து வந்தது. உயர்நீதி மன்றம், ராமன் அந்த இடத்தில்தான் பிறந் தான் என்று நம்புகிற மக்களின் ‘நம் பிக்கை’யினைச் சார்ந்து தீர்ப்பளித் திருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக தனியே வழக்குகள் நிலுவை யில் இருந்து கொண்டிருக்கின்றன. இவற் றின் மீதும் நீதி வழங்கப்பட வேண்டும்.

உச்சநீதிமன்றம் தற்போது சட்டத் தின் ஆட்சியின்படி (சரடந டிக டயற) மக்களின் ‘நம்பிக்கை’ யை உயர்த்திப்பிடித்து நீதி வழங்கிட வேண்டிய நிலையில் இருக் கிறது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே தீர்வு என்று மீண்டும் வலியுறுத்திக் கூறு கிறோம். எனவே, இதற்கிடையில் முஸ் லிம் மக்களை வலுக்கட்டாயமாக உயர் நீதிமன்றம் மசூதி கட்டுவதற்காக அளித் துள்ள மூன்றிலொரு பகுதியிலிருந்தும் விரட்டியடிக்க நடைபெற்று வரும் முயற்சிகளை வலுவிழக்கச் செய்ய வைப் பது அனைவரின் கடமையுமாகும். உச்ச நீதிமன்றம், நவீன இந்தியாவின் மதச் சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை வலுவிழக்கச் செய்யும் எவ்விதமான நிர்ப் பந்தங்களுக்கும் இடம் அளித்திடாது நீதி வழங்கிட அனுமதிக்கப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக