புதன், 6 அக்டோபர், 2010

வருணாசிரமம் வளர்த்தவனே ராஜராஜன்! -அருணன்

தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாண்டு விழாவைக் கொண்டாடியிருக்கிறது தமிழக அரசு. இந்தச் சமயத்தில் புராதனக் கலை-இலக்கியங்கள் பற்றி மாமேதை மார்க்ஸ் கூறி யது நினைவுக்கு வருகிறது. “கிரேக்கக் கலை யும், இதிகாசக் கவிதைகளும் சமுதாய வளர்ச் சியின் சில குறிப்பிட்ட வடிவங்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்வதில் நமக்குச் சிரமம் இல்லை. ஆனால், அவை இன்னும் நமக்கு அழகியல் இன்பத்தைத் தருகின்றன. சில அம்சங்க ளில் அவை உயர்தரமானதாக, நாம் எட்டவே முடியாத இலக்காக நிற்கின்றன என்பதுதான் வியப்பளிக்கும் விஷயமாகும்” என்றார் அவர்.

தஞ்சை கோயிலுக்குள் நுழையும் போது, அதன் கோபுரத்தை நிமிர்ந்து பார்க்கும்போது நம்முள் ஏற்படும் பரபரப்பை, பரவசத்தை தவிர்க்க முடியவில்லை. கம்பீரமான அழகிற்கு, தொன்மையான அதிசயத்திற்கு இருக்கும் தனி ஈர்ப்பு அது. அழகியலுக்கு என்று தனி விதிகள் இருக்கின்றன. அவை வேலை செய்கின்றன.

அந்த 216 அடி உயர கோபுரத்தைச் சற்று தொலைவிலிருந்து பார்க்கும் போது அது வானத்தைத் தொட்டு நிற்பதாகப் படும். மேகத் திரள்கள் அதை உரசிக் கொண்டு போவதாகத் தெரியும். அதன் 16 அடுக்குகளும் ஓராயிரம் ஆண்டுகளாக ஒன்றாக நின்று அந்த ஜாலத் தைச் செய்கின்றன.

உயர் கோபுரங்கள் எல்லாம் பொதுவாகக் கோயிலின் சுற்றுச்சுவர் வாயில்களில் இருக் கும். தஞ்சை பெரிய கோயிலிலோ அது கரு வறை மீதே இருக்கிறது. பிற கோபுரங்களில் எல்லாம் உச்சியானது பல கும்பங்களைப் பொருத்துகிற அளவுக்கு நீள் செவ்வகமாக இருக்கும். இதுவோ மன்னனின் சிரசில் இருக்கும் மணி மகுடம் போல உருண்டை யாக அமைந்து, ஒரே கும்பத்தைத் தாங்கி நிற் கிறது. இந்த பாணி கோபுரத்தில் உலகத்தி லேயே இதுதான் மிக உயரமானது.

கோபுரம் மட்டுமல்ல, அதன் அடிவாரத்தி லிருந்து புறப்படும் முழுக் கோயிலும் அந்தப் பிரகாரத்திற்குள்ளேயே நமக்கு அப்படியே காட்சியளிக்கிறது. அது பூரணமானது. அந்தப் பூரணத்தை எதுவும் மறைக்கவில்லை. மேகங்கள் மறைக்காத முழு நிலா போல அது பூமியில் அமர்ந்திருக்கிறது.

இதெல்லாம் சேர்ந்துதான் அந்த அழகி யல் இன்பத்தை நமக்கு அளிக்கிறது போலும். சில மகத்தான கலைஞர்களின் கற்பனை யில் இது முதலில் எழுந்திருக்க வேண்டும். அதைக் கல்லில் கொண்டு வந்தது சாதாரண சாதனை அல்ல, உலக மகா அற்புதம்.

வினோதம் என்னவென்றால், தஞ்சை யிலும் அதன் சுற்றுப்புறத்திலும் குன்றுகள் இல்லை. அவை சுத்தமான சமவெளிகள். கோயிலுக்கான கற்கள் புதுக்கோட்டையிலி ருந்து வந்திருக்கவேண்டும் என்கிறார்கள். கொண்டு வந்து கொட்டியிருக்கலாம். அந்தக் கற்களை, அவற்றைக் கோபுரமாகக் கட்டி முடிக்க எவ்வளவு கணித ஆற்றல், கட்டடக் கலை நுட்பம், இயந்திரவியல் ஆளுமை இருந்திருக்க வேண்டும்! அனைத்திற்கும் மேலே எவ்வளவு மனித உழைப்பு இருந் திருக்க வேண்டும்! இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வைக்க ஓர் அரசமைப்பு இருந்திருக்க வேண்டும்! அது, உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுக்கா மல் உத்தரவால் உழைப்பாளரை ஆட்டி வைக் கிற வல்லாண்மை அரசாங்கமாக இருந்தி ருக்க வேண்டும்! இல்லையென்றால் இது சாத்தியமில்லை.

அதனால்தான் மார்க்ஸ் கச்சிதமாகச் சொன்னார் - “கலைத்துறையின் சில முக் கியமான படைப்புகள் அதன் ஆரம்பகட்ட வளர்ச்சியில்தான் சாத்தியம்”. இன்னொரு தஞ்சை பெரிய கோயிலை மனித சமுதாயம் உருவாக்கப்போவதில்லை. அது ராஜராஜன் காலத்தில்தான் சாத்தியம். அவனது சமகா லத்து ராஜாக்கள் யாரும் இந்த சாத்தியப்பாட் டைப் பயன்படுத்தவில்லை. அவனது மகன் ராஜேந்திரன் கூட கம்பீரத்திலும் அழகிலும் சற்றே குறைவான ஒரு கோயிலைத்தான் கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்ட முடிந் தது. அதனால்தான் ராஜராஜன் பெருமைக்கு ரியவன் ஆகிறான். நமக்கோ இனி “எட்டவே முடியாத இலக்கு” ஒன்று நம் முன்னாலேயே எழுந்து நிற்கிறது! எனவே, இந்த ஆயிரமாண்டு அதிசயத்தைக் கொண்டாடுவது இயல்புதான்.

ஆனால், தமிழக அரசு இதைக்கொண்டா டிய விதம் இருக்கிறதே, அது பொருத்தமற்றது. தஞ்சைப் பெரியகோயில் எனும் கலை அதி சயத்தை, கட்டட அற்புதத்தைக் கொண்டாடு வதைவிட அது ராஜராஜனின் ஆட்சியைப் புகழ்வதில் அதிக ஆர்வம் காட்டியது. “மக் களாட்சியைத் திறம்பட நடத்தி வாழ்ந்தவன் ராஜராஜன்” என்று முதல்வர் கலைஞர் நற் சான்றிதழ் வழங்கினார். “மத்தியிலும் மாநிலத் திலும் ராஜராஜனின் காலத்தைப் போன்ற தொரு நல்லாட்சி நடைபெற்று வருகிறது” என்று ஒரு போடு போட்டார் காங்கிரசின் மத் திய அமைச்சர் ஜி.கே.வாசன். மாநில அமைச் சர்கள் விடுவார்களா என்ன? கலைஞர்தான் இன்றைய ராஜராஜ சோழன் என்று ஒருவர் சொல்ல, மு.க.ஸ்டாலின்தான் ராஜேந்திர சோழன் என்று இன்னொருவர் முத்தாய்ப்பு வைத்தார். இதற்கு மேல் உச்ச ஸ்தாயிக்குப் போக யாரால் முடியும்? விழா இனிதே முடிந்தது!

ஆனால், தெரிந்தோ தெரியாமலோ ராஜரா ஜன் காலத்து, சில யதார்த்தங்கள் இந்த விழா விலும் வெளிப்பட்டன. ஓதுவார்கள் சிலர் பரி தாபமாக ஒரேயொரு தமிழ்ப்பாடலைப் பாடி னார்கள். பத்மா சுப்பிரமணியமோ ஆயிரம் நடனமங்கையரோடு கணபதி துதியிலிருந்து தனது நிகழ்ச்சியைத் துவக்கி ஆதி சங்கரரின் ஒரு சமஸ்கிருதப் பாடலுக்கு அபிநயம் பிடிப் பதோடு நிகழ்ச்சியை முடித்தார். நிகழ்ச்சித் தொகுப்பாளரோ ராஜராஜன் ஓதுவார்களை மட்டுமல்லாது, வேதபாராயணக் காரர்களை யும் நியமித்திருந்ததை மிகப்பெருமையோடு எடுத்துரைத்தார்.

அது மட்டுமா? இன்று போல அன்றும் பல நூறு அழகு மங்கையர்கள் இதே கோயி லில் ஆடிப்பாடியதை நினைவு கூர்ந்தார். அன்று... இன்று... என்பதெல்லாம் ஒன்றாகிப் போனதாகப் புளகாங்கிதப்பட்டார். அன்று இதே பெரிய கோயிலில் ஆடிய மங்கையர்கள் தேவதாசிகள். இந்தக்காலத்துப் பெண்மணி களை அவர்களோடு ஒப்பிட்டது இவர்களுக் குப் பெருமை சேர்க்குமா என்றெல்லாம் அவர் யோசிக்கவில்லை. உற்சாகத்தின் உச்சியில் அவர் வருணித்துக் கொண்டு போனார். இந்த நிகழ்ச்சிக்குத் தான் ஏகப்பட்ட முக்கியத் துவம், விளம்பரம். நாட்டுப்புறக் கலைகள் எல் லாம் பின்னுக்குத்தள்ளப்பட்டன.

வருணாசிரம எதிர்ப்பையும், ஆணாதிக்க எதிர்ப்பையும் தனது வாழ்நாள் முழுக்க வெளிப் படுத்தி வந்த பெரியார் இன்று இருந்தால் என்ன சொல்லியிருப்பார்? பெரியாரின் மாண வர்கள் என்றும், அண்ணாவின் தம்பிகள் என்றும் சொல்லிக்கொண்டு முதல்வர் உள் ளிட்ட திமுக தலைவர்கள் நிகழ்ச்சியை ரசித் துக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலே பாஜக வின் இல.கணேசன் உட்கார்ந்திருந்தார். முடி வில் பேசிய முதல்வருக்கு அப்போதுதான் தனது தலைவர்களின் நினைவு வந்தது போலும். “இந்த நிகழ்ச்சியின் சில கருத்துக் களை நாம் ஒப்புக்கொள்ளாவிட்டாலும்” என்று சற்றே காபந்து செய்து கொண்டு பத்மா சுப்பிரமணியத்தைப் பிரமாதமாகப் பாராட்டி னார். மார்க்சியவாதிகளும் பரதநாட்டியம் என்கிற அற்புத நடனவடிவத்தை ரசிப்பவர் களே. ஆனால் அதன்மூலம் சொல்லப்படுகிற கருத்தையும் கவனிக்கிறார்கள்.

விஷயம் இதுதான். எத்தனை மூடிகள், எவ்வளவு திரைகள் போட்டு மறைத்தாலும் வரலாற்று உண்மைகள் வெளிப்பட்டுத்தான் நிற்கும். பழம்பெருமை பேசும்போது எது மெய் யான பெருமை என்பதை உணர்ந்து, எது இன் றைக்கு சமூக வளர்ச்சிக்கு உதவும் என்ப தைப் புரிந்து பேச வேண்டும். நடந்தது எல் லாம் நல்லதே என்று பேச ஆரம்பித்தால், பிறகு ஏன் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட் டங்கள் நடத்தப்பட்டன என்பதற்கு விடை கிடைக்காமல் போய்விடும்.

இதே ராஜராஜன் காலத்திற்குப் பிறகுதான் தமிழகத்தில் சாதியத்தின் கொடூரப்பிடி இறுகி யது. ஆணாதிக்கத்தின் ஆலவட்டம் அதிக ரித்தது. 1940களில் நடந்த இனாம்தாரி ஒழிப் புப் போராட்டங்களும், தேவதாசி முறை ஒழிப்பு இயக்கங்களும் அவை 20ம் நூற் றாண்டிலும் தொடர்ந்தன என்பதற்குத் தெளி வான சாட்சியங்கள்.

தஞ்சை பெரிய கோயிலுக்கு எப்படி ஓரா யிரம் ஆண்டு வரலாறு உண்டோ, அதே கால வரலாறு நிலப்பிரபுத்துவத்திற்கும் உண்டு. இந்தக்கோயில் அன்றையத் தமிழகத்தின் கலையியலுக்கும், கட்டடத் தொழில்நுட்பத் திற்கும் எப்படி அற்புதமான எடுத்துக்காட்டோ, அதேபோல இது அன்றைய நிலப்பிரபுத்துவ ஆதிக்கச்சமூகத்தின் நெடிதுயர்ந்த அடையா ளமும் கூட. புராதனங்களுக்கெல்லாம் இத்த கைய இரட்டைத் தன்மை உண்டு.

இதை உணர்ந்து முன்னதைப்போற்றிப் புகழலாம், பின்னதைப் படிப்பினையாக நினைத்துப்பார்க்கலாம். இத்தகைய தெளி வான வரையறை எல்லாம் தமிழக ஆட்சியா ளர்களுக்கு இல்லை. அவர்கள் கோயில் கட்டுமானத்தின் பெருமையோடு, ராஜராஜன் காலத்து சமூக அமைப்பையே புகழ ஆரம் பித்துவிட்டார்கள். கூடவே தங்களையே ராஜராஜனாகவும், ராஜேந்திரனாகவும் நினைத் துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். இது அர சியல் ஆதாயக்கணக்கு, தற்பெருமை உத்தி.

இதில் எல்லாம் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றாலும், இதனால் எழும் சரித் திர அபத்தத்தைப் புரிந்து கொள்ள ராஜராஜன் காலத்து சமூக வாழ்வைச் சற்றே நினைவு படுத்த வேண்டியுள்ளது. அவன் தமிழைக் காத்தான், வளர்த்தான் என்பது எவ்வளவு தூரம் உண்மை என்பதையும் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தித்தான்- ராஜராஜ சோழன் காலத்தில் தான் தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வேர் பிடித்து நின்றது. மூன்று வகை நிலவுடை மையாளர்கள் தோன்றினார்கள். பெரும்பா லான நிலங்கள் பெரும் வேளாளர்களுக்குச் சொந்தமாக இருந்தன. இது “வெள்ளான் வகை” எனப்பட்டது. அரசுக்கு வரி செலுத்திய கிராமம் இந்த வகையைச் சார்ந்தது என்கிறது திருவாலங்காட்டுச் செப்பேடு. கிராமத் தொழில் செய்வோருக்கு ஊழிய மானியமாக ஒதுக்கப்பட்ட நிலம் இரண்டாவது வகையா கும். பிராமணர்களுக்குத் தானமாக தரப்பட்ட “பிரமதேயம்”, “தேவதானம்” எனப்பட்டவை மூன்றாவது வகையாகும்.

நிலமானது பிராமணர்கள் குழு ஒன்றுக் குக் கூட்டாகத் தரப்பட்டால் அது பிரமதேயம், அதுவே தனியொரு பிராமணருக்குத் தரப்பட் டால் அது “ஏகபோக பிரமதேயம்”. கல்கி எழு திய “பொன்னியின் செல்வன்” சரித்திர நாவ லில் அநிருத்த பிரம்மராயர் என்கிற மந்திரி வருவார். இவருக்குப் பத்துவேலி நிலம் இப் படி ஏகபோக பிரமதேயமாகத் தரப்பட்டதாக அன்பில் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

“முதலாம் ராஜராஜன், ராஜேந்திரனின் ஆட்சிக்காலங்களில் பிரமதேயக் கிராமங் களின் தனித்தன்மையைக் காக்க வேண்டி இதர வகுப்பினரின் நில உரிமைகள் சுருக்கப் பட்டன” என்கிறார் புகழ்பெற்ற வரலாற்றாளர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார். இதற்குச் சில திட்டவட்டமான ஆதாரங்களைத் தந்திருக் கிறார் அவர். அவை-”ராஜராஜனின் 17ம் ஆண்டில் (கி.பி.1002) ஒரு பொதுக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி பிரமதேயங்களில் நிலம் வைத்திருக்கும் மற்ற வகுப்பினர் எல் லோரும் தங்களுடைய நிலங்களை விற்று விடவேண்டும். நிலம் பயிரிடுவோரும் மற்ற நில மானியங்களை அனுபவிப்போரும் மட் டும் இதற்கு விதிவிலக்கு. அவ்வாறு விற்கப் பட்ட நிலங்களை வாங்கும் பிராமணர்கள் பணத்தை உடனடியாக இதற்காக நியமிக்கப் பட்ட விசேஷ அதிகாரியிடம் கட்டிவிட வேண்டும். ராஜகேசரி சதுர்வேதி மங்கலத் தில் இவ்வாறு விற்கப்பட்ட நிலங்களை அர சனின் தமக்கை குந்தவை தேவியாரே வாங்கி அவ்வூர்க் கோவிலுக்குத் தானமாக அளித் தார். இதுபோன்று முதலாம் ராஜேந்திரன் காலத்திலும் புலியூர்க் கோட்டத்தில் உள்ள வேளச்சேரி என்னும் பிரமதேயத்திற்கும் ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டது”

ராஜராஜ சோழன் காலத்து சமூகக் கட்ட மைப்பு வருணாசிரமமே என்பதை இது துல் லியமாகக் காட்டுகிறது. அதுவே தங்களது ஆதிக்கத்திற்கு ஏற்றது என்று நிலப்பிரபுக் களும், அவர்களது தலைவராகியப் பேரரசரும் உணர்ந்து அதை நிலைநிறுத்தியிருக்கிறார் கள். கோவில் கட்டுமானமும், அதைச் சுற்றிப் பின்னப்பட்ட சமூக உறவுகளும்கூட அடிப் படையில் நிலப்பிரபுத்துவக் காப்பு வேலைகளே.

கோவில்களுக்குத் தானமாக வழங்கப் பட்ட நிலங்களே “தேவதானம்”. சிவன் கோவில் என்றால் சூலாயுதமும், விஷ்ணு கோவில் என்றால் சங்கு சக்கரமும் பொறிக்கப்பட்ட கற்கள் அந்த நிலத்தில் ஊன்றப்பட்டன. இந்த நிலங்களிலிருந்து கிடைத்த வருமானத் தைக் கொண்டு வருணாசிரமக் கல்வி போதிக்கப்பட்டது. நீலகண்ட சாஸ்திரியார் கூறுகிறார்- “உயர்கல்வியானது சாதி தழு வியே கற்பிக்கப்பட்டது. மடங்கள்-கோவில் களைச் சார்ந்த பள்ளிகளிலும் கல்லூரிகளி லும் இது பயிற்றுவிக்கப்பட்டது”

முதலாம் ராஜேந்திரன் காலத்தில் தென் னாற்காடு மாவட்டத்தின் (எண்ணாயிரம்) ராஜராஜ சதுர்வேதி மங்கலத்தில் ஒரு கல் லூரி இயங்கியது. அங்கே 340 மாணவர்களும், 14 ஆசிரியர்களும் இருந்தார்கள். அவர்கள் படித்ததும் இவர்கள் சொல்லிக்கொடுத்ததும் சமஸ்கிருத நூல்கள். நான்கு வேதங்கள், பல சூத்திரங்கள், ரூபாவதரா இலக்கணம் போன்ற வையே அந்தக் கல்லூரியின் பாடத்திட்டம். ஆக, வேதக்கல்வி சொல்லிக்கொடுத்தது தான் சோழர்கால ஆட்சி.

இதிலே வேதனையானதொரு நகைமுரண் உண்டு. அதை சாஸ்திரியார் முத்தாய்ப்பாகக் கூறுகிறார்- “சமஸ்கிருதத்தில் உயர்படிப்பு முறை அமைந்திருந்தது குறித்து நமக்கு மேற் கண்ட விபரங்கள் தெரிகின்றன. ஆனால், அதே காலத்தில் தமிழ்க் கல்வியின் தன்மை எவ்வாறு இருந்தது என்பது பற்றி நம்பிக்கை யான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை”

வருணாசிரமத்தின் ஒரு முக்கியமான கூறாக, தாய்மொழிக் கல்வியைப் புறக்கணித்து சமஸ்கிருதத்தை முனனிறுத்துவது இருந் தது. இடைக்காலத்தில் சமண-புத்த மதங் களை ஒழித்துக்கட்டத் தமிழ் இசைப்பாடல்க ளைப் பயன்படுத்திக்கொண்டார்களே தவிர, காரியம் முடிந்ததும் மீண்டும் தங்கள் பழைய நிலைமைக்குத் திரும்பி விட்டார்கள். அதைத் தான் ராஜராஜன் - ராஜேந்திரன் காலம் உணர்த்துகிறது. சிதம்பரம் கோவிலில் பதுக் கப்பட்டிருந்த மூவர் தேவாரத்தை ராஜராஜன் மீட்டெடுத்தான் என்பதும் கர்ண பரம்பரைக் கதையாகக் கூறப்படுகிறதே ஒழிய வலுவான கல்வெட்டு ஆதாரம் இல்லை.

மற்றொரு புகழ்பெற்ற வரலாற்றாளரான கே. கே.பிள்ளையும் கூட கீழ்க்கண்ட முடிவுக்கே வந்தார் - “பிற்காலச் சோழர் காலத்தில் வட மொழியும் வடமொழி நூல்களும் எந்த அள விற்குப் போற்றி வளர்க்கப்பெற்றன என்ப தைத் தெளிவாய் அறிந்து கொள்ள முடிகின் றது. ஆயின், தமிழ்மொழி வளர்ச்சி பற்றி அறிந்து கொள்வதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்க வில்லை” தேவாரம் ஓதுவதற்குக் கோவில்க ளில் ஓதுவார்களை நியமித்தான் ராஜராஜன் என்பதைத் தவிர மற்றபடி அவனது காலத்து கல்வி முறை சமஸ்கிருத மயமாகவே இருந்தது. கோவிலில் அர்ச்சனை மொழியாக சமஸ்கிருதம் இருந்தது என்றே நீலகண்ட சாஸ்திரியார் கருதுகிறார். அதற்கு ஏராளமான கல்வெட்டு ஆதாரம் உண்டு என்கிறார்.

அரசு நிர்வாக அமைப்பில் சில புதுமை களைச் செய்தான். உள்ளாட்சி அமைப்பு களை முறைப்படுத்தினான் என்பது உண் மையே. ஆனால் அவையெல்லாம் வருணாசி ரமக் கட்டமைப்பிற்குள் உள்ளடங்கியவையே என்பதை மறந்துவிடக்கூடாது. பிரபலமான உத்திரமேரூர்ச் சாசனம் அன்று நிலவிய கிராம சபை பற்றிப் பேசுகிறது. அதன் உறுப்பினர் களது தகுதி பற்றியும் பேசுகிறது. அதில் ஒன்று- “பிராமணர் அல்லாதவர்கள் கிராம சபையில் உறுப்பினராகும் தகுதியற்றவர்கள் ஆவர்” இதன் பொருள் பிரமதேயக் கிராமங் களை பிராமணர்களே நிர்வாகம் செய்து கொண்டார்கள் என்பது. பிற கிராமங்களை பிராமணரல்லாத நிலப்பிரபுக்கள் நிர்வாகம் செய்து கொண்டார்கள். இந்த இரண்டிலும் பஞ்சமர்கள் போன்ற அடித்தட்டு உழைப் பாளிகளுக்கு எந்தப்பங்கும் இல்லை என் பதே யதார்த்தமாகும். அவர்கள் கிட்டத்தட்ட அடிமை நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களில் பண்ணையடிமைகளும் இருந் தார்கள், தினக்கூலிகளும் இருந்தார்கள்.

இதிலே பெண்கள் நிலை மிகப் பரிதாப மானது. தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு இரு பெண்கள், அவர்களது நண் பர்கள், உறவினர்கள் தங்களைத்தாங்களே விற்றுக்கொண்டார்கள். வயலூர் கோவிலுக் குத் திருப்பதிகம் பாடவும், ஈசனுக்கு வெண்சாமரம் வீசவும் மூன்று பெண்கள் விலைக்கு வாங்கப்பட்டார்கள்.

இது பிற வேலைகளுக்கு விற்கப்பட்டவர் கள், வாங்கப்பட்டவர்கள். தேவரடியார்கள் என்று தாசித் தொழிலுக்காகவே உருவாக்கப் பட்டவர்கள் கதை தனி. அது பற்றி நிறைய கல் வெட்டுக்கள் கிடைத்துள்ளன. தென்னாற் காடு திருவக்கரை சந்திர மவுலீசுவரர் கோவி லுக்கு சில வேளாளப்பெண்மணிகள் தேவரடி யார்களாக கி.பி.1098ல் விற்கப்பட்டார்கள். “எங்களடியாள் அங்காடியும் இவள், மகள் பெருங்காடியும், இவள் மக்களும் திருவக்கரை உடைய மாதேவர்க்கு தேவரடியாராக நீர் வார்த்துக் கொடுத்தோம்” என்பது நம்மை உருக்கும் அக்னி வார்த்தைகள்.

சதி எனப்படும் உடன்கட்டை ஏற்றுகிற பழக்கம் சங்க காலத்திலேயே துவங்கிவிட் டது. அது சோழர்கள் காலத்தில் சர்வசா தாரணமாக நடந்தது. ராஜராஜனின் தந்தையா கிய சுந்தரசோழன் மாண்டபோது அவனோடு உடன்கட்டை ஏறினாள் அவனது மனைவி வானவன் மாதேவி என்பாள். தென்னாற்கா டில் கிடைத்த வீரராஜேந்திரனின் (கி.பி.1063-1070) கல்வெட்டு ஒன்று கணவனை இழந்த மனைவியின் மனப்போராட்டத்தை உணர்த்து கிறது. தனது சக்களத்திகளுக்கு அடிமையாக வாழ்வதைவிட அவள் உடன்கட்டை ஏற விரும்பினாள். இதைத் தடுக்க முயன்றவர் களைக் கண்டு அவளுக்கு கோபம் வந்த தாகப் பொறித்து வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் அன்று நிலவிய பலதார மணத்தின் கொடுமை, மனைவியே விரும்பி உடன் கட்டை ஏறியதாகத் தோற்றம் காட்டும் தந்திரம் எனப் பல செய்திகள் வெளிப்படுகின்றன.

பொருளியல் வாழ்வில் நிலப்பிரபுத்துவ மும், அதன் சமூகக் கட்டமைப்பாக வருணா சிரமமும் இருந்தன என்பதே ராஜராஜன்-ராஜேந்திரன் காலத்து நடப்பாகும். வருணா சிரமம் வளர்த்தவர்களே இவர்கள். இதை மறந்துவிட்டு அவர்களைப் போலவே தற்போ தைய மத்திய - மாநில அரசுகள் இயங்குகின் றன என்று காங்கிரஸ், திமுக தலைவர்கள் மார்தட்டுவது கேலிக்குரிய விஷயமாகும். எது பெருமை என்று தெரியாமலேயே பெருமை யடித்துக் கொள்வதாகும்.

பெரியார்-அண்ணா பெயரை ஒருபுறம் சொல்வதும், ராஜராஜன்-ராஜேந்திரன் பெயரை மறுபுறம் சூடிக்கொள்வதும் முற்றிலும் முரணான விஷயங்கள் என்பதை திமுக தலைவர்கள் உணர வேண்டும். கட்சிக் கரைவேட்டி கட்டிக்கொண்டு, புதிய அரசு செயலகக் கட்டிடத்தில் அமைச்சர் நாற்காலி யில் உட்கார்ந்து கொண்டு, இருபுறமும் பெண் கள் சாமரம் வீசவேண்டும் என்று நினைக் கக்கூடாது!

வரலாற்றை முன்னோக்கி நடத்த வேண் டுமே தவிர, பின்னோக்கி நகர்த்தக்கூடாது. தமிழனின் புராதனக் கலை ஆற்றலைப் போற்றுவோம், பாதுகாப்போம். அதே நேரத் தில் அவன் கடந்து வந்த சமூக-பொருளாதார ஒடுக்குமுறைக்கு மீண்டும் திரும்ப மாட் டோம் மாறாக சமத்துவ சமுதாயப் பாதையில் நடைபோடுவோம் என்பதில் உறுதியாக இருப்போம்.

ஆதாரங்கள்:

ஆயசஒ யனே நுபேநடள டிn ஹசவ யனே டுவைநசயவரசந

சோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி

சோழர் வரலாறு - கே.கே.பிள்ளை

தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும் - வே.தி.செல்லம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக