புதன், 6 அக்டோபர், 2010

காமன்வெல்த்: ‘ப்ரைவேட் வெல்த்’ சுரண்டல் -வெங்கட்

அக்டோபர் 3 முதல் 14 வரை சர்வதேச காமன் வெல்த் விளையாட்டுகள் இந்திய தலைநகரான புதுதில்லியில் நடை பெற உள்ளது . காமன்வெல்த் என்பது 54 முன் னாள் பிரித்தானிய காலனிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பு ஆகும். 1930 ல் முதன்முதலாக இந்த விளையாட்டுகள் கனடா நாட்டில் நடைபெற்ற பொழுது 11 நாடுகள் பங்கேற்றன. ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விளையாட்டுகள் , 1942 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் இரண்டாம் உலக போர் காரணமாக நடைபெறவில்லை. இந்த விளை யாட்டு தொடங்கும்போது பிரிட்டிஷ் பேரரசு விளையாட்டுகள் (க்ஷசவைளைா நுஅயீசைந ழுயஅநள) என்று அழைக்கப்பட்டது. பின்னர் 1954 ல் பிரிட் டிஷ் பேரரசு மற்றும் காமன் வெல்த் விளை யாட்டுகள் (க்ஷசவைளைா நுஅயீசைந யனே ஊடிஅஅடிறேநயடவா ழுயஅநள ) என்று அழைக்கப்பட்டு, பின்னர் 1970 ல் பிரிட்டிஷ் காமன் வெல்த் விளையாட்டுகள் (க்ஷசவைளைா ஊடிஅஅடிறேநயடவா ழுயஅநள) என்று அழைக்கப்பட்டது. கடைசியாக 1978 ல் தற் போதுள்ள காமன் வெல்த் விளையாட்டுகள் என்ற பெயரைப் பெற்றது. 2006 ல் ஆஸ்தி ரேலியாவில் நடைபெற்ற இந்த போட்டிகள், தற்போது 19வது முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளது.

சர்வதேச போட்டிகள் நடப்பதாலேயே பொருளாதார முன்னேற்றத்தை ஒரு நாடு அடையும் என்ற ஆழமான கருத்து பலமுறை பொய்ப்பிக்கப்பட்டுள்ளது. 1965ல் ஜப்பான் நாட்டில் உள்ளடோக்கியோ நகரில் நடை பெற்ற சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு பிறகு , அந்த நாட்டின் பொரு ளாதார முன்னேற்றம் சரிவடைந்தது. போட்டி கள் நடைபெறுவதற்கு முன்பு 13.1 சதவீதமாக இருந்த பொருளாதார முன்னேற்றம், 5.2 சதவீதமாக 1965ஆம் ஆண்டு குறைந்தது. 1988ல் தெற்கு கொரியாவில் உள்ள சியோல் நகரில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் போட்டி களுக்கு பிறகு 10.6 சதவீதமாக இருந்த பொருளாதார முன்னேற்றம் 6.7 சதவீதமாக குறைந்தது. மேலும் போட்டி நடைபெறும் நகரத்தின் பொருளாதார பங்களிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில், போட்டிகள் நடந்தபிறகு பொருளாதார தொய்வு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தில்லி, இந்தியாவின் தலை நகராகவும், நாட்டிற்கு அதிக பொருளாதார பங்களிப்பு அளிக்கக்கூடிய நகரமாகவும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

2003ல் இந்த விளையாட்டு எங்கு நடை பெறவேண்டும் என்று நடந்த ஏலத்தில் இந் தியா அளித்த வாக்கின்படி பங்கேற்கும் ஒவ் வொரு நாட்டிற்கும் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பணமும், விமானப் பயணச் செலவு, தங் கும் மற்றும் உணவு வசதிகள் அனைத்தும் அளிப்பதாக கூறியே இந்த வாய்ப்பை பெற் றது. ஆனால் இந்த விளையாட்டை நடத்தும் அதிகாரத்தை பெற்று ஏழு ஆண்டுகள் முடிந்த பின்னும் கட்டுமானப் பணிகள் மற்றும் விளை யாட்டுத் தளங்கள் அமைத்தல் வேலைகள் இன்னும் முடிவு பெறாமலே இருக்கின்றன. இந்த விளையாட்டை உலகத்தரத்திற்கு நடத் துவதற்காக ரூ.30,000 கோடிக்கும் மேலாக நிதி ஒதிக்கியுள்ளது அரசு. இந்த தொகையையே தற்பொழுது மிஞ்சிவிட்டதால் , 2009-10ஆம் ஆண்டுக்கான தலித் மக்களுக்கான நிதியி லிருந்து, மேலும் ரூ.678 கோடிகளை இந்த விளையாட்டுச் செலவுகளுக்காக தில்லி அரசு ஒதுக்கி உள்ளதாக செய்திகள் வந்துள் ளன. ஆனால் இத்தனை கோடிகள் செலவு செய்தும் தரமான கட்டுமான மற்றும் அடிப் படை வசதிகள் தில்லி நகரில் வந்துள்ளதா என்பது கேள்விக் குறியான விசயமே. ஹெச். எல்.ஆர்.என் (ழடுசுசூ) என்ற ஆராய்ச்சி நிறுவ னத்தின் அறிக்கையின்படி இந்த விளை யாட்டு போட்டிகளுக்கான மத்திய அரசாங்க நிதி ஒதுக்கீடு ரூ.45.5 கோடிகளாக 2005-06ஆம் வருடத்தில் இருந்தது. 2009-10ல் ரூ.2,883 கோடிகளாக உயர்ந்துள்ளது. இது 6,235 சத வீதம் உயர்வு ஆகும். ஆனால் இதே காலகட்டத்தில் கல்விக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு வெறும் 60 சதவீதமே உயர்ந் துள்ளது. மேலும் சுகாதாரம் மற்றும் மருத்துவத் திற்கான ஒதுக்கீடு 160 சதவீதமே உயர்ந்துள் ளது. தொடக்கத்தில் ரூ.1,899 கோடிகளை இலக்காக கொண்ட காமன்வெல்த் விளை யாட்டு போட்டிகள், இன்று ரூ.30,000 கோடி களையும் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. தில்லி நகரை வெளிநாட்டவர் கண்களுக்கு அழகாக காட்டுவதற்காக அரசு மேற்கொண் டுள்ள நடவடிக்கைகள் நம்மை மேலும் ஆச் சரியப்படுத்தியுள்ளது.

முதலில் தில்லியில் உள்ள ஆயிரக்கணக் கான பிச்சைக்காரர்களை அகற்றி, அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பியது அரசு. அப்படி அனுப்ப முடியாதவர்களை அரசு கட்டுப்பாட் டில் உள்ள தங்குமனைகளில் (ளுாநடவநச ழடிஅநள) தள்ளியது. வெளிமாநிலங்களிலிருந்து வந்து கூலி வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை, அவர்கள் தங்கி வந்த திறந்தவெளி பொது இடங்களில் இருந்து அகற்றியது. குடிசைப் பகுதிகளை மூங்கி லால் ஆன தட்டைகள் மூலம் மறையும் படி வேலிகள் அமைத்தது. வெளிநாட்டவருக்கு இந்தியாவின் ஏழ்மை தெரிந்துவிடக் கூடா தென்று. முக்கிய சாலைகளில் வாழ்வாதாரத் திற்காக வணிகம் செய்து வரும் சிறு வியாபாரி கள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளை அகற்றியது. நாடாளுமன்றத்தின் அருகில் உள்ள ஜந்தர் மந்தர் என்ற இடம் அரசின் தவறான கொள்கைகள் மற்றும் திட்டங்களை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களின் தளமாக வெகு நாட்களாக இருந்து வருகிறது. இந்தியாவின் எல்லா பகுதிகளில் இருந்து மக்கள் இங்கு தங்கி தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அந்த இடத்தில் இருந்த போராடும் மக்களை அகற்றி, இரவு நேரங்க ளில் அங்கு தங்கக் கூடாது என்ற ஆணை யையும் பிறப்பித்துள்ளது அரசு. கடைசியாக அனைவரையும் வீட்டிற்கு வெள்ளை அடித்து தங்களது இல்லங்களை புதுப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது அரசு. இந்தியாவில் உள்ள ஏற்றத்தாழ்வு மற்றும் ஏழ்மையை அகற்ற பல விதமான போராட்டங்கள் மற்றும் கருத்தி யல் பகிர்வுகள் நடந்து வரும் வேளையில், இந்தியாவின் ஏழ்மையை மறைத்து, வெளி நாட்டவர் கண்களுக்கு அழகாக காட்ட எப்படி ஒரு எளிய வழியை கையாண்டுள்ளது தில்லி மற்றும் மத்திய அரசாங்கம்.

பலகோடி ரூபாய் பணம் செலவழிப்பதால் தில்லியில் அடிப்படை கட்டுமான வசதிகள் பெருகி, சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறும் என்று எண்ணினால், அதிலும் சிக்கல்தான். பல தரப்பில் இருந்து ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் இருக் கிறது. சரிந்துவிழும் பாலங்கள், நீர்க்கசியும் விளையாட்டுத்தள கூரைகள் என தினம் தோறும் படிக்கும் செய்திகளை பார்க்கும் போது, இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் உண் மையெனவே நம்ப வேண்டியிருக்கிறது. சமீ பத்தில் மத்திய கண்காணிப்பு ஆணையம் வெளியிட்ட ஒரு இடைக்கால அறிக்கை இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை ஊர்ஜிதப் படுத்துகிறது. அந்த அறிக்கையின்படி தகுதி யற்ற நிறுவனங்களுக்கு அதிக விலையில் பணிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும், பணிகள் ஒப்பந்த முறையில் கொடுக்கப்பட்ட தில் பல முறைகேடுகளும், குளறுபடிகளும் உள்ளன என்றும், புதுப்பிக்க வேண்டிய தேவை இல்லாத இடங்களையும் புதுப்பிப்ப தற்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும், கட்டுமானப் பணிகளின் தரமின்மை போன்ற விசயங்கள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட் டப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களு டன் ஒப்பந்தம் செய்தது முதல் பல விளை யாட்டு பொருட்களை வாங்கியது வரை அனைத்திலும் ஊழல் இருப்பது தெளிவாக வெளிவந்துள்ளது.

இதைத் தவிர இந்த விளையாட்டு மற்றும் அதன் தொடர்பான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் ஒப்பந்த தொழிலாளர் கள் மிகவும் மோசமான முறையில் சுரண்டப் பட்டு வருகின்றனர். மக்கள் உரிமைக்காக போராடும் இயக்கமான பி.யு.டி.ஆர்(ஞ.ரு.னு.சு) வெளியிட்டுள்ள அறிக்கை இந்த சுரண்டலை ஊர்ஜிதப்படுத்துகிறது. இந்த அறிக்கையின் படி தொழிலாளர்களுக்கான அனைத்து பாது காப்பு சட்டங்களும் மீறப்பட்டுள்ளது. தொழி லாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி மறுக் கப்பட்டுள்ளது, குறிப்பிட்ட வேலை நேரம் கடைப்பிடிக்கப்படாமல் அதிக நேரம் வேலை செய்ய பணிக்கப்படுகின்றனர். போதிய குடிநீர், குளியலறை மற்றும் கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் அறவே வழங்கப்படவில்லை. ஒப் பந்தக் காரர்கள் அரசுடன் இணைந்து இந்த மாபெ ரும் ஊழலில் பங்கு வகிப்பதாகவும், இதை எதிர்த்து முறையீடு செய்ய வழியின்றி தொழி லாளர்கள் அடிமை வாழ்க்கை வாழ்கின்றனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது. அவர்கள் வேலை செய்யும் இடம் மற்றும் தங்கும் இடங் களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், அவர்களுக்கான குறைந்தபட்ச மருத்துவ வசதிகூட செய்துதரப்படவில்லை என்கிறது இந்த அறிக்கை. இப்படி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அடிப்படை உரிமை மற்றும் வசதிகள் மறுக்கப்பட்டு மிகவும் மோசமான முறையில் சுரண்டப்படுவதுதான் உலகத்தரம் என்று அரசு கருதுகிறது என்பதே இதிலிருந்து நமக்கு புரிகிறது.

இப்படிப்பட்ட முறைகேடுகள், காலதாம தம், ஊழல், சுரண்டல், மற்றும் தரமில்லா கட்டுமான பணிகளுடன் தொடங்கும் இந்த காமன்வெல்த் விளையட்டுகள், இந்தியாவை எப்படி உலகத் தரத்திற்கு உயர்த்தும்?

(கட்டுரையாளர், ஆராய்ச்சி மாணவர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக