புதன், 6 அக்டோபர், 2010

காஷ்மீர்: எண்ணெய் ஊற்றும் இந்துத்துவம் -அசோகன் முத்துசாமி

“என்ன நடக்கும் என்றால் வெறும் கூடு மட்டும்தான் இருக்கும். அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவை நீங்கள் வைத்துக் கொள்கிறீர்களோ அல்லது இல் லையோ, அதன் உள்ளடக்கம் முழுவதும் காலி செய்யப்பட்டுவிட்டது.’’
(ஏ.ஜி.நூரனி, பிரன்ட்லைன், செப்டம்பர் 24, 2010)

இது இப்போது யாரும் கூறியது அல்ல. கூறியவர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த வரோ அல்லது அரசியல் விமர்சகரோ அல்ல. 1964ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் குல்சாரி லால் நந்தா நாடாளு மன்றத்தில் பெருமையுடன் கூறிக் கொண்டது இது. நிற்க.

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் சேரு வதற்கு ஒப்புக் கொண்டபோது போடப் பட்ட ஒப்பந்தம் அப்போதே மீறப்பட்டது. (அதாவது உடனடியாக மீறப்பட்டது.) அதன் சுயாட்சி பாதுகாக்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதி அதற்காக வகுக்கப்பட்ட அரசியல் சட்ட விதிகளா லேயே அழிக்கப்பட்டது என்று நூரனி மேலும் விளக்குகின்றார். ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்படாத மத்திய அரசாங்கத் தின் அதிகாரம் எதுவும் மாநிலத்திற்கு நீட் டிக்கப்படும் விஷயத்தில் மாநில அரசாங் கத்தின் சம்மதத்தைப் பெற வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு கூறுகின்றது. அதன் 2வது உட் பிரிவு அப்படி சம்மதம் தெரிவிப்பதற்கான மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தை மிகத் தெளிவாகக் கட்டுப்படுத்துகின்றது. அதாவது, மாநில, மத்திய அரசாங்கங்கள் தன்னிச்சையாக எதுவும் செய்துவிட முடி யாது. மாநில, மத்திய சட்டமன்றங்கள் அதை அங்கீகரிக்க வேண்டும். இல்லை என்றால் செல்லாது. 1957ம் ஆண்டு அர சியல் நிர்ணய சபையில் நிறைவேற்றப் பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் அது கலைக்கப்பட்டவுடன் ஜி.எல்.நந்தா என்ன கூறினார் தெரியுமா?

‘அரசியல் நிர்ணய சபை இப்போது கலைக்கப்பட்டுவிட்டது. ஆதலால், 370ன் 2வது பிரிவு தேவையற்றதாக ஆகி விட்டது. பிரிவு 3ன் படி குடியரசுத் தலை வர் செயல்படுவதற்கு இப்போது தடை யற்ற அதிகாரம் இருக்கின்றது. மத்திய அதிகாரத்தை நீட்டிப்பதற்கு இதைப் பயன்படுத்த முடியும் எனும்போது அதை (370வது பிரிவு) ஏன் ரத்து வேண்டும்? என்று அவர் நாடாளுமன்ற உறுப்பினர் களைப் பார்த்துக் கேட்டார். ’ (மேகு இதழ்)

இதுதான் காஷ்மீருக்கு வழங்கப்பட் டுள்ள சிறப்பு அந்தஸ்தின் உண்மையான நிலைமை. இதைத்தான் ரத்து செய்ய வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் தொடர்ந்து சாமியாடி வருகின்றார்கள். ஆனால், காங்கிரசோ அதை வைத்துக் கொண்டே மற்ற மாநிலங்களில் உள்ள சாதாரண உரிமைகளைக் கூட காஷ்மீர் மக்களுக்கு வழங்க மறுத்திருக்கின்றது. மறுக்கின்றது.

‘மாநிலப் பட்டியலில் உள்ள ஒரு துறை மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டுமானால் நாடாளுமன்றம் மூன் றில் இரண்டு பங்கு பெரும்பான்மையில் அரசியல் சட்டத்திருத்தத்தை மேற் கொள்ள வேண்டும். சரிபாதி மாநிலங்கள் (மாநில சட்டமன்றங்கள்) அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் (அரசியல் சட்டம் 368 வது பிரிவின் 2வது உட்பிரிவு). ஆனால், 370வது பிரிவின்படி, காஷ்மீர் விஷயத் தில் வெறும் ஒரு அரசு உத்தரவின் மூலம் மாநிலப் பட்டியலில் உள்ள அனைத்து துறைகளையும் மத்தியப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளலாம்; மாநில அரசாங் கம் அதை ஏற்றுக் கொண்டால் (மோசடி யாக நடத்தப்பட்ட தேர்தல் அல்லது விரும்பிய முடிவு வருகின்ற வகையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தேர்தல் மூல மாகவோ, காங்கிரஸ் ஆதரவைச் சார்ந்து அதிகாரத்தில் இருக்கின்ற அரசாங்கம்).’ (நூரணி, மே.கு. இதழ்).

பாஜகவைப் பற்றிச் சொல்ல வேண்டி யதில்லை. எப்போதுமே இல்லாததை இருப்பதாகச் சொல்லி, இருப்பதையும் பறித்துக் கொள்வதுதான் அதன் வேலை. சில மாதங்களுக்கு முன்னால் நாடெங்கும் ஒரு போராட்டத்தை நடத்தியது. அதன் மையமான கோரிக்கைகளில் ஒன்று இஸ் லாமிய மாணவர்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கல்வி உதவித் தொகை (சலுகை என்கிறது பாஜக) வழங்குகின்றது மத்திய அரசு. ஆனால், இந்து மாணவர்களுக்கு எதுவும் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டியது. நாடெங்கும் மத்திய அரசாங்கத்தாலும், மாநில அரசாங்கங்களா லும் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங் குடியின மாணவர்களுக்கு பல பத்தாண்டு களாக கல்வி உதவித்தொகை வழங்கப் பட்டு வருகின்றது. அது பல ஆயிரம் கோடிகள் தகும். ஆனால், இந்து மாணவர் களுக்கு எதுவுமே கொடுக்கப் படுவதில்லை என்பதன் மூலம் அந்த மாணவர்கள் இந்துக்கள் இல்லை என் கிறது பாஜக. அதுதானே பொருள்? பின் யார்தான் பாஜகவின் இலக்கணப்படி இந் துக்கள்?

இந்தக் குற்றச்சாட்டைக் கூறுவதன் மூலம் இதுநாள் வரையிலும் ஏதோ வேண் டத்தகாத குப்பை போல் நடத்தப்பட்டு வந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் அற்ப உதவியையும் தடுக்க முயல்கின்றது.

காஷ்மீருக்கு உண்மையில் சிறப்பு அந்தஸ்து எதுவும் நடைமுறையில் இல் லை. 370வது பிரிவு நடைமுறையில் வெறும் காலி டப்பாதான். அது மட்டுமின்றி, அந்தக் காலி டப்பாவைப் பயன்படுத்தி அம்மாநில மக்களுக்கு அடிப்படை உரி மைகள் கூட மறுக்கப்பட்டு வருகின்றது. எனினும், அது இருந்தால்தானே அதை முறையாகப் பயன்படுத்துங்கள் என்கிற கோரிக்கை எழும். அதுவே இல்லாமல் செய்துவிட்டால்? பாஜகவின் திட்டம் அதுதான்.

ஆனால், இந்துத்துவவாதிகளுக்கு பிரச்சனை தீர்வதில் விருப்பமில்லை. நாடு எப்போதும் பற்றி எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் கள். அதனால்தான், சீத்தாராம் யெச்சூரியும், மற்ற சில தலைவர்களும் பிரிவினைவா தத் தலைவர்கள் சையத் அலி ஷா கிலானி, மிர்வாய்ஸ் உமர்பாரூக், யாசின் மாலிக் போன்றவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதை எதிர்க்கின்றனர். அவர்களைச் சந்தித்த தலைவர்கள் குழு வின் சார்பாக சந்திக்கவில்லை, தனிப் பட்ட முறையில் சந்தித்தனர் என்று பாஜக வின் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருக்கின்றார். போதாக்குறைக்கு ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக இந்தக்குழுவை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ளது. காரணம், விஎச்பி, பஜ்ரங்தளம் போன்ற தேசியவாத அமைப்பு களை இந்தக் குழுவில் கலந்து கொள்ளும் படி அழைக்கவில்லை என்பதாம். நாச மாய்ப் போச்சு. மேலும், ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கூடாது, ராணுவத்தை திரும்ப அழைக்கக் கூடாது என்றும் சங்பரிவாரம் கூறுகின்றது. துப் பாக்கி முனையில் ‘அமைதியையும்’ நிலைநாட்ட முடியாது. ஒற்றுமையையும் காப்பாற்ற முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக