திங்கள், 25 அக்டோபர், 2010

கறுப்புச் சட்டைக் காரருக்கு செங்கொடி மரியாதை

விடுதலை அடைந்த இந்தியாவில் கம்யூனிஸ்டுகளின் மீதான அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. நாடெங்கும் கம்யூனிஸ்டுகள் வேட் டையாடப்பட்டனர். கம்யூனிஸ்டு கள் அடுக்குமுறைக்கு அடிபணிய மறுத்து முடிந்த வகையில் எல்லாம் போராடினர். தமிழகத்திலும் ஏராள மான சிகப்பு மலர்கள் கொடிய அடக்கு முறையால் வீழ்த்தப்பட்டன. சேலம் சிறைகூட இந்த இரத்த வேட்டைக்கு தப்பவில்லை. 22 கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடலூர் சிறையிலும் துப்பாக்கிச் சூடு. இரணி யன், மாரி, மணவாளன், தூக்கு மேடை பாலு, திருப்பூர் பழனிச்சாமி, அன்னை லட்சுமி என தியாகிகள் பட்டியல் நீண்டு கொண்டே போனது இக்காலகட்டம்தான். சதி வழக்குகள், கொலை வழக்குகள் என சிறைக்கூடங்களில் கம்யூனிஸ்டு களை பூட்டிக் கொக்கரித்தது ஆளும் வர்க்கம். கட்சி மீது தடையும் நீடித்த காலம்.
பாட்டாளி வர்க்கத்திற்காக உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்தும் கம்யூனிஸ்டுகள் போராடிக் கொண்டிருந்தபோது பல வார, மாத, தின ஏடுகள் தங்கள் எழுத்தாயுதத்தை அடக்குமுறைக்கு எதிராக உயர்த்தத் தவறின. ஆளும்வர்க்க அடக்கு முறையை நியாயப்படுத்தி செய்தி வெளியிட்ட ஏடுகளே அதிகம்.
இந்த நெருக்கடியான சூழலில் "திராவிடர் கழகம் மட்டும் கம்யூ னிஸ்டுகளுக்கு துணை நின்றது. தோள் கொடுத்தது" என்கிறார் என். ராம கிருஷ்ணன்.
திராவிடர் கழகத்தின் ஏடான ‘விடுதலை’ கம்யூனிஸ்டுகள் மீதான தாக்குதல் குறித்த விபரங்களை வெளியிட்டது. தாக்குதலைக் கண்டி த்து கட்டுரைகள் வெளியிட்டது. சித்ரவதைகளை, அடக்குமுறையை கண்டித்து ஏஐடியுசி தலைவர் சர்க் கரைச் செட்டியார் விடுத்த அறிக்கை விடுதலையில் வெளியானது.
பெரியார், சேலம் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தலையங்கம் தீட்டினார். 1950 பிப்ரவரி 15ஆம் நாள் விடுதலையில் இது வெளிவந்தது. அந்த நெடிய தலையங்கத்தில் பெரியார் எழுதுகிறார்:
"சேலம் பலி 22 ஆகிவிட்டது. காயம்பட்டவர்களில் எத்தனை பேர் அதிகார வெறிக்குப் பலியானார் களோ தெரியவில்லை. ரயில் விபத் தோ பஸ் விபத்தோ ஏற்பட்டால் விபத்தில் மாண்ட உயிர்களின் பெயர்கள் உடனே வெளிவந்துவிடு கின்றன. ஆனால் சேலம் பலிப் பட்டி யல் மட்டும் வெளிவராத காரணம் தெரியவில்லை"
"தங்கள் கொள்கைக்காக உயிர் விட்ட ஒப்பற்ற வீரர்களை அதி காரவர்க்கம் மரக் கட்டைகளாகக் கருதி இருக்கிறதா? அல்லது அவர்க ளும் மனிதர்கள், அவர்களுக்கும் குடும்பங்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் உண்டு என்று கருதி இருக் கிறதா? சவங்களைக் கூட இவர்கள் கண்ணில் காட்டியதாகத் தெரிய வில்லை"
"ஊரெங்கும் 144 தடையும், ஊர் வலத்திற்குத் தடையும் தொழிலாளர் வாய்களில் அடக்குமுறை துணி முடிச்சும் இல்லாதிருந்தால் சேலம் நிகழ்ச்சிக்கு நாள்தோறும் கண்டனம் சரமாரியாகக் கொட்டுவதை காண லாம். இன்று மூச்சு பேச்சு இல்லை. தமிழ் நாட்டில் சுடுகாட்டு அமைதி நிலவிக் கொண்டிருக்கிறது. 22 பிணங்களும் தொழிலாளர் உலகைக் கண்டு ஏராளமாகச் சிரிக்கின்றன. நினைக்க நினைக்க நெஞ்சம் துடிக் கிறது."
இப்படி எழுதியதோடு நின்று விடாமல் மார்ச் 5ஆம் நாள் மாநிலம் முழுதும் கண்டனக் கூட்டங்கள் நடத்த பெரியார் அறைகூவல் விடுத்தார். எம்.ஆர். ராதா தலைமை யேற்று கண்டன ஊர்வலம் நடத்தி னார். அவர் வெள்ளைக் குதிரையில் வந்தார். பெரியார், குத்தூசி குருசாமி போன்றோர் கம்யூனிஸ்டுகளை ரகசியமாக சந்தித்து ஆதரவும் உத விக்கரமும் நீட்டினர். ராமநாதபுரம், திருப்பூர், சென்னை, பொள்ளாச்சி உட்பட தமிழகம் முழுவதும் பல இடங்களில் எம்.ஆர். ராதா ‘ரத்தக் கண்ணீர்’ நாடகத்தையும்; ‘பேப்பர் நியூஸ்’ ‘முருகன்’ போன்ற நாடகங்க ளையும் நடத்தி நிதி திரட்டி உதவி னார். பல தோழர்கள் சிறையில் இரு ந்து விடுதலை அடைய பெரியாரும், திராவிட இயக்கத் தலைவர்கள் குத்தூசி குருசாமி போன்றோரும் செய்த உதவிகள் நிறையவே உண்டு. இந்த மாபெரும் தோழமைக்காக தோழர் எம். கல்யாண சுந்தரம் நன்றி தெரிவித்து குத்தூசி குருசாமிக்கு எழுதிய கடிதம் ஒரு வரலாற்று ஆவணமாகும். அதில் அவர் எழுதி னார்:
"என்னுடைய விடுதலை திராவி டர் கழகம் - கம்யூனிஸ்ட் கட்சியின் ஐக்கியத்தின் வெற்றியாகும். ஜனநாயக சக்திகளின் வெற்றியாகும்"
"கம்யூனிஸ்ட் கட்சியும் தொழி லாளி விவசாயி மக்களின் இயக்கங் களும் காங்கிரஸ் பாசிஸ்ட் அடக்கு முறைக்கு பலியானபோது விடு தலைப் பத்திரிகை செய்துள்ள சேவை சரித்திரத்தில் இடம் பெற வேண் டியது"
இப்படி அன்று கம்யூனிஸ்டுகள் நெருப்பு வளையத்தில் சிக்கித் தவித்தபோது துணை நின்றவர்கள் திராவிடர் கழகத்தவர்களே. இந்த உறவும் தோழமையும் கம்யூனிஸ்டுக ளிடம் என்றும் பசுமையாகவே இருக்கும். இதன் வெளிப்பாட்டை இன்னொரு செயலில் எதிரொலிக்கக் காண்கிறோம்.
"1965ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் நாள் குத்தூசி குருசாமி சென்னையில் காலமானார். அவரது உடல் ஷெனாய் நகரிலிருந்த அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது நடைபெற்ற ஒரு சம்பவத்தினை பிரபல கல்வியாளரும் தமிழக பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநராக இருந்தவருமான நெ.து. சுந்தர வடிவேலு விவரிக்கிறார்" என தனது நூலில் குறிப்பிட்டுள்ள என். ராமகிருஷ்ணன் அந்த விவரங்களை சுந்தர வடிவேல் நூலிலிருந்து அப் படியே தருகிறார்.
"நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சியொன்று நினைவிற்கு வரு கிறது.
குத்தூசி குருசாமியாருக்கு இறுதி வணக்கம் செலுத்த பலதரப்பட் டவர்கள், பல கட்சியினர் கூடியிருந் தார்கள். அறிஞர் அண்ணாவும் எம். கல்யாண சுந்தரமும் வந்திருந்தனர். இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்"
"இறுதி ஊர்வலம் புறப்படுவதற்கு இரண்டொரு மணி இருந்தது. அவ் வேளை செஞ்சட்டை அணியினர் வந்து சேர்ந்தார்கள். தோழர் ஏ.எஸ். கே.(ஏ.எஸ்.கே. அய்யங்கார் கம் யூனிஸ்ட், தொழிற்சங்கத் தலைவர்) ஏற்பாடு அது! தோழர் குருசாமியார், இல்லத்தின் முன் அணிவகுத்து நின்றார்கள். இறுதிப் பயணத்தில் அயனாவரம் சுடுகாடு வரை இருபுற மும் அணிவகுத்து வந்து தங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்கள்..."
"எதற்காக நன்றி? தன்னாட்சி இந்தியாவில் நம் ஆட்சிகள் செய்த முதல் பெரிய செயல் பொதுவுடை மைவாதிகளை வேட்டையாடியதே. பொதுவுடைமைக் கட்சிக்குத் தடை விதித்தனர்"
"சென்னை மாகாணத்தில் ஆயி ரக்கணக்கானவர்களை சிறையில் தள்ளிக் கொடுமைப்படுத்தினார்கள். சேலம் கடலூர் மையச் சிறைகளில் கம்யூனிஸ்டுகளை காக்கை குருவிகள் போல் சுட்டுத்தள்ளினர்."
"அக்கொடுமைகளை எதிர்த்துக் கடுமையாகக் கண்டித்தது பெரியா ரின் திராவிடர் கழகம்; ஆசிரியர் குத்தூசி குருசாமியின் அனல்பொழி யும் கட்டுரைகளும் தலையங்கங்க ளும் தொடர்ந்து கொடுமைகளை அம்பலப்படுத்தி, ஆட்சியாளர் களைத் தலை குனியச் செய்தது..."
"அக்கால கட்டத்தில் தலை மறைவாக இருந்த சில கம்யூனிஸ்ட் முன்னணியினர் குத்தூசியாரின் இல்லத்தில் அடைக்கலம் புகுந்து தப்பிச் சென்றனர். இவற்றிற்கு நன்றியாக ஏ.எஸ்.கேயின் தோழர்கள் அணிவகுத்தார்கள்"
நெ.து. சுந்தரவடிவேலுவின் மேற் கூறிய வாக்குமூலம் நமக்குப் பல செய் திகளை உறுதி செய்கிறது. அது மட் டுமா?
காலச் சூறாவளியில் என்னென்ன வோ நிகழ்ந்துவிட்டது. தமிழகத்தில் உழைக்கும் வர்க்கம் மீது கடும் அடக்குமுறைகளை திராவிடர் இயக்க வாரிசுகளாய் வந்தவர்கள் ஏவிவிட்டதும்...இன்னும்...தொடர்வதும் நம் அனுபவம்.
மீட்டெடுக்க வேண்டிய உயர் அரசியல் சமூக பண்பாட்டு வேர் களை இச்சம்பவங்கள் நமக்கு நினை வூட்டவில்லையா? (தீக்கதிர் வரலாற்றுச் சுவடு பகுதியில் இடம்பெற்ற கட்டுரை )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக