சனி, 25 செப்டம்பர், 2010

அகநானூறு கூறும் வேளாப்பார்ப்பார் யார்? - வெ.பெருமாள்சாமி

மனு, மனித குலத்தை நான்கு வருணங் களாகப் பிரித்தான். பிராமணர், சத் திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால் வருணத்தாரில் பிராமணரே மேல் வருணத்தார் எனப்பட்டனர். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட் பித்தல் (வேள்வி செய்தல், செய்வித் தல்) ஈதல், ஏற்றல் என்னும் ஆறு தொழில்கள் பார்ப்பார்க்கு உரி யவை. அவற்றையே அவர்கள் செய் தல் வேண்டும். உடல் உழைப்பு முத லான பிற தொழில்களை அவர்கள் மேற்கொள்ளக்கூடாது எனப்பட் டது. நால் வருணத்தாரில் கடைசி வருணத்தார் ஆன சூத்திரர்களுக்கே உடல் உழைப்பு உரியது எனப்பட் டது. பார்ப்பாரால் உடல் உழைப்பு இழிவாகக் கருதப்பட்டது; உடல் உழைப்பை மேற்கொண்ட சூத்திரர் களும் இழிகுலத்தோராகக் கருதப் பட்டனர். வயலில் இறங்கிச் சேற் றிலே உழுதல், நாற்றுநடுதல், களை பறித்தல், நெல்லரிதல் முதலான தொழில் களில் ஈடுபட்டவர்களைக் கடையர், கடைசியர் என்று தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சை மாவட் டத்தில் கும்ப கோணத்துக்கு அருகில் உள்ள ஓர் ஊரில் பார்ப்பார் சிலர் வயலில் இறங்கி நேரடியாக உழவுத் தொழி லில் ஈடுபட்டனர். அதற்காக அவர்கள் சாதிவிலக்கம் செய் யப்பட்டனர். சங்கராச்சாரியார் அவ்வூருக்கு வருகை தந்த போது, சாதிவிலக்கம் செய்யப்பட்ட பார்ப்பனக் குடும் பத்தார், அவரைக் காணவும் காணிக்கை செலுத்தவும் அவர் தங்கியிருந்த மடத்துக்குச் சென்றனர். உடல் உழைப்பில் ஈடுபட்டதற்காக சாதி விலக்கம் செய்யப்பட்ட அவர் களைக் காணவும், காணிக்கை பெறவும் சங்கராச்சாரி யார் மறுத்துவிட்டார். மனுதர்மத்துக்கு விரோதமாக அவர் கள் நடந்து கொண்டார்கள் என்று காரணம் கூறப்பட்டது.

உடல் உழைப்பில் ஈடுபட்ட பார்ப்பார், வேட்டலும் வேட்பித்தலும் ஆகிய செயல்களைச் செய்தல் கூடாது என்று தடுக்கப்பட்ட செய்தி சங்க இலக்கியங்களிலும் பதிவாகியுள்ளது. பார்ப்பார்க்கு உரியவையாகக் கூறப் பட்ட ஆறு தொழில்களை விடுத்து, சங்கறுத்து வளை யல் செய்வதாகிய உடல் உழைப்புத் தொழிலில் ஈடு பட்ட பார்ப்பார் சிலர் வேட்டல், வேட்பித்தல் ஆகிய செயல்களில் ஈடுபடுதல் கூடாது என்று தடுக்கப்பட் டனர். அவ்வாறு தடுக்கப்பட்ட அவர்கள் “வேளாப் பார்ப்பார்” என இழிவாகக் கூறப்பட்டனர். “வேளாப் பார்ப்பான் வாளரந்துமித்தவளை” ( வேளாப்பார்ப் பான் வாளரத்தால் அறுத்துச் செய்த வளையல்) என்று அகநானூறு (24) இது குறித்துக் கூறுகிறது. இத்தொடர், உடல் உழைப்பில் ஈடுபட்டமையால் அவர்கள் வேள்வி செய்தலும் செய்வித்தலும் ஆகிய செயல்களில் ஈடுபடக் கூடாது என்று தடுக்கப்பட்டனர் என்ற வரலாற்று உண் மையை உணர்த்துகிறது.

சங்குகளை அறுத்து வளையல் செய்தவர்களில், தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவ ராகத் திகழ்ந்த நக்கீரனார் குறிப் பிடத்தக்கவர் ஆவார். அவர் சங்க றுத்து வளையல் செய்யும் தொழிலில் ஈடுபட்டவர் என்பதனைத் திரு விளையாடல் புராணம் கூறுகிறது.

பெண்கள் கூந்தலின் நறுமணம் இயற்கையானது என்ற பொருளில் சிவன் பாடித்தந்ததாகக் கூறப்பட்ட “கொங்குதேர் வாழ்க்கை” என்ற பாடல் பொருட்குற்ற முடையது என்று கூறி, பாண்டிய மன்னன் அறிவித்த பொற்கிழியை தருமி என்ற புலவன் பெற முடியாதவாறு நக்கீரர் தடுத் தார். அதனால் சினமுற்ற சிவன், தன் நெற்றிக் கண்ணைக் காட்டி நக் கீரரை அச்சுறுத்தினார். ஆனாலும் நக்கீரர் அஞ்சாமல் “நெற்றிக் கண் ணைக் காட்டினாலும் குற்றம் குற் றமே” என்று துணிவுடன் கூறினார்.

அப்போது சிவனார், நக்கீரரது பிறப்பின் இழிவுபற்றி இகழ்ந்து கூறினார். “கீர் கீர் என்னும் ஓசை உண்டாகுமாறு சங்கினை அறுக்கும் தொழில் புரிபவ னான நக்கீரன் என்பாட்டில் குற்றம் காண்பதா?” என்று சிவனார் நக்கீரரின் பிறப்பு குறித்தும் தொழில் குறித்தும் இழிவாகப் பேசினார். உடனே சிவனது கூற்றை மறுத்து நக்கீரர் “சங்கறுப்பது எங்கள் குலம்; சங்கரனார்க்கு ஏது குலம்?” என்று பதிலடி கொடுத்துச் சாடினார். அதனால் சின முற்ற சிவன், நெற்றிக்கண்ணால் தீயெழ விழித்து நோக்கி நக்கீரரை எரித்தார் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

இங்கு, நக்கீரன் தன் பாட்டில் குற்றம் கண்டு கூறியதற் காக சிவன் நெற்றிக் கண்ணைக் காட்டி அச்சுறுத்தி னாரா அல்லது இழி தொழில் புரிவோனான நக்கீரன் அர சவையில் தன்னை எதிர்ப்பதா? என்று சினம் கொண்டு சிவன் நக்கீரனை எரித்தாரா? என்ற வினாக்கள் எழுகின்றன.

தமிழ்ச்சங்கத்தின் தலைமைப் பீடத்தில் இருந்து அவன் அகற்றப்படுதல் வேண்டும்; அல்லது உலகத்தில் இருந்து அகற்றப்படுதல் வேண்டும். இவற்றில் இரண்டா வதாகக் கூறப்பட்டதைச் செய்தலே எளிமையானது. எனவே, நக்கீரனை உயிருடன் எரித்துவிட்டு, ‘சிவன் நெற்றிக் கண்ணைக் காட்டி நக்கீரனை எரித்தழித்தார்’ என்று கொலைப்பழியைச் சிவன் மேல் சுமத்திவிட்டார்கள்.

எப்போதுமே, மூடநம்பிக்கைகளையும், பகுத்தறி வுக்கு ஒவ்வாத கருத்துக்களையும் மக்களிடையே பரப்பிடவும் அவற்றை எதிர்ப்போரை அடக்கவும் அழிக் கவும் சநாதனிகள் பலாத்காரத்தைப் பயன்படுத்தத் தவறிய தில்லை. இவ்வுண்மை, பரமசிவனில் இருந்து பாஜக உள் பட பால்தாக்கரே வரை அனைவருக்கும் பொருந்தும்.

ஊழ்வினை, வினைப்பயன், இம்மை, மறுமை முதலான மூடக் கருத்துக்களை மறுத்த சார்வாகர், பூதவாதிகள் முத லான பகுத்தறிவாளர்களையும் அவர்தம் நூல் களையும் சநாதனிகள் எரித்து அழிந்தனர் என்ற வரலாற்று உண் மைக்கு நக்கீரர் எரிக்கப்பட்ட நிகழ்வு சிறந்த சான்றாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக