சனி, 25 செப்டம்பர், 2010

"முதல் முஸ்லிம் பெண் நாவலாசிரியர்" -முனைவர் நித்தியா அறவேந்தன்

தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களால் பாராட்டப்பெற்ற, முஸ்லிம் பெண்களில் முதன் முதலில் தமிழில் நாவல் படைத்து அளித்த சித்தி ஜூனைதா பேகம் கி.பி. 1917ஆம் ஆண்டு பிறந்துள்ளார். பிறந்த மாதம், நாள் தொடர் பான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. இவருடைய தந்தையின் பெயர் எம்.ஷரிப்பெய்க், தாயார் முத்துக்கனி என்கிற கதீஜா நாச்சியார். இவர் தந்தையின் அனுமதியோடு தன் வீட்டிற் குப் பக்கத்தில் இருந்த கிறிஸ்தவர்களால் நடத்தப்பெற்ற ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை படித்துள்ளார். மேற்கொண்டு படிக்க அவ ருடைய தாயார் அனுமதிக்கவில்லை. இவரது பன்னிரண்டாம் வயதில் திருமணம் நடைபெற் றது. கணவர் பெயர் ஃபகீர் மாலிமார். இவர் மளி கைக்கடை வணிகம் செய்துள்ளார். பின்னர் மலே சியாவில் உள்ள பூலோசாம்பு என்ற தீவிற்கு வேலை தொடர்பாகச் சென்றுள்ளார். இரண்டாம் உலகப் போரின்போது மாலிமார் அங்கேயே நோய்வாய்ப்பட்டு இயற்கையெய்தியதால், பேகத்தின் திருமணவாழ்க்கை சில ஆண்டுக ளுக்குரியதாகவே அமைந்துவிட்டது.

ஜூனைதாபேகத்தை மற்றவர்கள் ‘ஆச் சிமா’ என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைக் கின்றனர். ‘சித்தீக்’ என்றால் அரபுமொழியில் ‘உண்மையாளர்’ என்பது பொருளாம். அதன் பெண்பாலாக ‘சித்தி’ கருதப் பெறுகின்றது. நபி கள் நாயகம் மகள்களுக்குரிய பெயரும் இதுவே. எனவே பேகம் அம்மையாரும் தன் மகள்களுக் குப் பெயர்ச் சூட்டும்போது பெயருக்குமுன் ‘சித்தி’ என்பதைச் சேர்த்துச் சூட்டியுள்ளார்.

முஸ்லிம் பெண்கள் எழுதுவதில்லை. அதி லும் மூன்றாவதுவரை மட்டுமே படித்த ஜூனைதா பேகம் எழுதியதும், தன் பெயரையும் போட்டு, வீட்டு முகவரியைக் கொடுத்து, உருவப்படங் களுடன் கூடிய புத்தகமாக வெளியிட்டுள்ளது அவரது துணிச்சலை உணர்த்துகிறது. இவரது காதலா? கடமையா? நாவலுக்கு ‘தாருல் இஸ்லாம்’ ஆசிரியரும், நபிகள் நாயக மாண் பினை எழுதியவருமான பா. தாவுத்ஷாசாகி பிடம் மதிப்புரை கேட்டுள்ளார். இவர் அம்மை யாரின் தந்தைக்கு நண்பராம். “இது ஒரு பெரிய திறமையா? இதற்கு ஒரு மதிப்புரை தேவையா?” என்று ஏளனமாகப் பேசியதை மற்றொருவர் மூலம் அம்மையார் கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால் உ.வே.சா. அவர்களின் மதிப்புரையில் அம்மையாரை

“முகம்மதியர்களுக்குள்ளும் தமிழ் நூல்க ளைப் பயின்றுள்ள பெண்மக்கள் இருக்கி றார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக் குகிறது. இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும் படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது.” என்று புகழ்ந்து எழுதி யது அவரைப் பெரிதும் ஊக்கப்படுத்தி மகிழ் வித்திருக்கிறது.

நாவல் வெளிவந்த பிறகு பல எதிர்ப்பு களைச் சந்தித்திருக்கிறார். ‘ஒரு முஸ்லிம் பெண் நாவல் எழுதுவதா? அதுவும் ‘காதல்’ என்ற சொல்லுடன், எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண் டும்’ இப்படிப் பல கடுஞ்சொற்களைச் சந்தித் திருக்கிறார். ஊரே கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்து இவரைக் கேலி பேசியிருக்கிறது. இவை எல்லாவற்றையும் கடந்து இவர் எழுதுவதில் ஆர்வம் காட்டியுள்ளார்.

இவரது காதலா? கடமையா? எனும் நூல் 1938ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் நாவ லாகும். இவரது மற்றொரு நாவலான சண்பக வல்லிதேவி மற்றும் சில கட்டுரைகளும் இந் நூலுடன் தற்பொழுது இடம் பெற்றுள்ளன. 1938ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வந்த இந் நூல் 2003இல் (ஸ்நேகா வெளியீடு, இராயப் பேட்டை, சென்னை - 14) இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது.

இஸ்லாமும் பெண்களும் என்ற கட்டுரை யில் இஸ்லாம் சமயத்தில் பெண்களுக்கு அளிக்கப்பெற்றுள்ள உரிமைகள் தொடர்பாக விளக்கப் பெற்றுள்ளது. அவை,
1. மறுமண உரிமை
2. மண மறுப்புரிமை
3. சொத்துரிமை

மண மறுப்புரிமையின் வழியாகப் பெண் கள் தங்களுக்கு விருப்பமில்லாத ஒருவரை மணந்துகொள்ள தேவையில்லை. இதுதொடர் பான தன் கருத்தைத் திருமணத்தை நடத்தி வைக்கும் நீதிபதியிடம் முறையிடலாம். அதே போல் சொத்துரிமையின் வழித் தனக்குக் கிடைக் கும் சொத்தைத் தனக்கு விருப்பமான வழியில் செலவிடலாம்; மற்றவர்க்கு அதில் உரிமை யில்லை. திருமணத்திற்குப்பின் கணவன் பெயரோடு தன் பெயரை இணைத்துக்கொள்ளத் தேவையில்லை. இவ்வாறு இஸ்லாமியச் சட் டம் வழிப் பெண்களுக்கு உரிமைகள் அளிக்கப் பெற்றுள்ளன என்பது இக்கட்டுரையில் விளக் கப் பெற்றுள்ளது.

நாவல்களில் அத்தியாயங்களுக்குப் பெய ரிடும் முறையையும் இவரது இரு நாவல்களில் காணமுடிகிறது. சான்றாக ஒரு சிறுகுடும்பம், வனமாளிகை, மாயாபுரி....(காதலா? கட மையா?), நிலமகளோ, கடமைவீரன், விடு தலை.....(மகிழம்பூ) என்பனவற்றைக் குறிக்க லாம்.இவரது படைப்புகளில் இஸ்லாமிய சமய ‘நபிகளின்’ சிந்தனைகளைக் கூறினாலும் திருக்குரானிலிருந்து அதிகமாக மேற்கோள் கள் எடுத்தாளப்பெறவில்லை. ஆனால் தமி ழிலக்கியங்களிலிருந்து அதுவும் திருக்குறளி லிருந்து அதிகமாக மேற்கோள்கள் எடுத்தாளப் பெற்றுள்ளன.

ஜூனைதா பேகம் எழுதிய காலச்சூழல், அவரது சமயக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, அவரது படைப்பு களை அணுகினால் அவர் மிக உயர்ந்த புரட்சி கரச் சிந்தனையாளராகவும், மனவலிமைமிக்க வராகவும் இருந்திருப்பதை அவருடைய படைப்பு களில் பெண் கதைமாந்தர்கள் படைக்கப் பெற் றுள்ளதன் வழியும் அவரது சொந்த வாழ்க்கை அனுபவங்கள் வழியும் அறியமுடிகிறது.

(சித்தி ஜூனைதா பேகம் பார்வையில் பெண்மை - என்ற நூலிலிருந்து)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக