சனி, 25 செப்டம்பர், 2010

‘‘அறுக்க வேண்டிய வலி’’ - மயிலைபாலு

வீட்டை விட்டு வெளியே போ; உன் னால எங்க குடும்ப மானமே போயி டும். பெற்றவர்களும் உறவினர் களும் பேசியதால் வலி-

வீட்டை விட்டு வெளியே வந் தால் இன்னார் இவர் என்ற பேதம் இல்லாமல் எல்லாராலும் இழி வாகத் துரத்தப்பட்டதால் வலி-

ஆட்டோக்கள், பேருந்துகள், ரயில் வண்டிகள் என எத்தனை வாகனங்கள் ஓடினாலும் எங்க ளுக்கு இடமில்லை என்பதால் வலி-

இயற்கை உபாதைகளைக் கழிக்க பொதுக் கழிப்பறைகளுக் குக் சென்றால், நீ ஆணில்லை என்று ஆண்களும், நீ பெண் ணில்லை என்று பெண்களும் விரட்டுவதால் உண்டாகும் வலி-

எங்களுக்கென்று பெயர் இருந் தாலும் அதை விடுத்து, பொட்ட, ஒம்பது, அலி என்று சொல்வதால் ஏற்படும் அவமான வலி-

இப்படி எத்தனை எத்தனை வலிகளைச் சுமந்து கொண்டு வாழ் கிறார்கள் திருநங்கைகள் எனப் படும் அரவானிகள்,

‘ஆணாகிப் பெண்ணாகி அலி யாகி’என்று ஆண்டவனைச் சிறப் பிக்கிறார்கள். ஆனால் அவர்களே சமூகத்தில் நடமாடும் போது ஏனிந்த அவலங்கள், இதற்கு என்ன தான் முடிவு? தீர்வு? மேலெழுந்து வரும் வினாக்களுக்கு விடைகாண தன் வழியில் முயன்றிருக்கிறார் நாடகப் பேராசிரியர் மு.ராமசாமி அவர்கள்.

பெரியாராய் மாறினார் ஒரு ராம சாமி. பெண்களின் உரிமைகளுக் காய் அவர் ஓங்கிக் குரல் கொடுத் தார், பெரியார் போன்ற தோற்றம் கொண்ட இன்றைய ராமசாமி திருநங்கைகளின் மனவலிகளுக்கு மருந்து தேடுகிறார் ‘வலியறுப்பு’ என்ற நாடகத்தின் மூலம்,

மேடையிலும் வீதியிலும் அரங் கேற்றலாம் என்ற வடிவத்தில் ஆக் கப்பட்டுள்ள இந்த நாடகம் அர வான் களப்பலியிலிருந்து தொடங் குகிறது. கூத்து- கட்டியங்காரன் பாணியில் துவக்கமே அனல்பறக் கிறது.

அதன்பிறகு நாடகம் நிறைவு பெறும் வரை பார்வையாளர்கள் உறைந்து போகும் அளவுக்குக் கோர்வையான காட்சிகள் வருகின் றன.

“மனதிற்கேற்ப
உடலைச் செதுக்கினால் அது பாவமா?”

என மனதின் அடி ஆழத்தைத் தொட்டு அலைக்கழிக்கும் வினா வுடன் தொடங்குகிறது நாடகம். ஆணின் உடலில் பெண்மை போர்த் திய இவர்கள் யார்? உங்களின் கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். ‘நாங்கள் யார்?’ என்று அவர்களே எழுப்பும் கேள்வி எரியீட்டி யெனப் பாய்கிறது.

கருவறையில் இருக்கும் போது முதல் ஆறுவாரங்களுக்கு எல்லோ ருமே பெண் தான்.

எக்ஸ், ஒய் என இரண்டு குரோ மசோம்களில் எக்ஸ்-ம் எக்ஸ்-ம் சேர்ந்தால் பெண்; எக்ஸ்-ம் ஒய் -யும் சேர்ந்தால் ஆண்; இந்தச் சேர்க்கை யில் ஏற்படும் சிறுஊனத்தில்தான் மூன்றாம் பாலின உருவாக்கம் அடங்கியிருக்கிறது என்ற அறிவி யல் செய்திகூட நாடகத்தில் விவ ரிக்கப்படுகிறது.

இதற்காக ஆசிரியரைத் தனி யாகவே பாராட்ட வேண்டும்.

வேண்டுதலுக்காய்ச் சுற்றி வர நவ (9) கிரகங்கள் -

உணவுத் தேவையை நிறைவு செய்ய நவ (9) தானியங்கள்..

செல்வச் செழிப்புக்கு அடை யாளமாய் நவ (9) ரத்தினங்கள்..

எண்ணிய காரியம் ஈடேற மனிதர்கள் விரும்பும் எண் கூட 9 தான்...

ஆனால் அதே எண்ணைப் பயன்படுத்தி மனிதர்களில் ஒரு பகுதியினராய் உள்ளவர்களுக்கு ஏற்படுத்தும் வலிதான் எத்தனை எத்தனை!

“ஒத்தையில வாழ முடியுமா நமக்கு உற்றதுணை ஒன்றும் வேண்டாமா?”

என்று கேள்வி எழுப்பும் நாடகப் பனுவல்,

“பெற்றவர்கள்
ஆறுதலானால் - இங்கு
பிரிந்து வாழ
தேவையில்லையே”

என்று சொல்லும் தீர்ப்பை ஒவ்வொருவர் மனதிலும் செதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பெற்றவர்கள் இதைச் செய்யா ததால்தான் திருநங்கைகள் வலி.. வலி... வலியை மட்டுமே வாழ்க் கையின் சொத்தாகச் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.

இந்த வலியை அறுத்தெறிய வேண்டும், வாழ்க்கையில் சக மனிதர்களோடு மனிதர்களாய் கவுரவத்தோடு வாழ வேண்டும் என்ற திருநங்கைகளின் ஆவலைப் புறந் தள்ளிவிடவோ- நிராகரித்து விடவோ முடியாது; கூடாது என் பதைக் கருப் பொருளாகக் கொண்டு இயங்குகிற நாடகம் ‘வலியறுப்பு’

இதன் சிறப்பம்சம் பிரியாபாபு உள்ளிட்ட திருநங்கைகளே பாத் திரங்களாய்ப் பங்கேற்பதுதான். அவர்களின் வலிகளை அவர்களே முன்வைத்தது உயிர்ப்புடன் இருந் தது. நாடகப் பேராசிரியர் மு. ராம சாமி கட்டியங்காரன் போல் இடை யிடையே வந்து செல்கிறார்- தெளி வான குரல் வளத்துடனும் பார்வை யாளர்களைக் கவரும் மெய்ப் பாட்டுடனும்

இளையராஜாவும் வடிவேல னும் இவரோடு இணைந்து பார் வையாளர்களைத் தங்களின் கணீர் குரலாலும் பறை அடிப்பது உள் ளிட்ட இசையாலும் கவர்கின்றனர்.

கிராமப்புற இசைக் கருவிகள்- நாட்டுப்புற வடிவங்களில் பாடல் கள் என்ற வடிவிலான நாடக மாக்கம் திருநங்கைகள் விஷயத்தில் பரிவை ஏற்படுத்த உதவுகின்றன.

வலிகளைச் சொல்லி அனு தாபம் கோருவதல்ல.

“மானமும் அறிவும் மட்டுமே
மனிதர்களின் சொத்து
மானத்தை விட்டுவிடாதீர்கள்
அறிவியலால் அழகுபடுத்திக் கொள்ளுங்கள்
தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்
இதனை மனதில் கொள்ளுங்கள்

-என்று திசைகாட்டுகிறது நாடகம்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் திருநங்கைகளைக் கொண்டு நாடகத்தை நிகழ்த்தியது பெருமைக்குரியதாக அமைந்தது. சமூகப் பிரச்சனை ஒன்றை ஆழமா கவும் அதேசமயம் அனைவரும் உணர்ந்து புரிந்து கொள்ளும் படியாகவும் நெறியாளுகை செய் திருக்கிறார் பேராசிரியர் ராமசாமி அவர்கள். இந்த வலி திருநங்கை களின் வலி அல்ல; சமுதாயத்தின் வலி; அறுத்து அகற்றப்பட வேண் டிய வலி என்பதை கலை நயத் தோடு சித்தரிக்கும் நாடகமாய் ‘வலியறுப்பு’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக