சனி, 25 செப்டம்பர், 2010

தொல்காப்பியர் காலம் எது? - அருணன்

தினமணி ஏடு மாதந்தோறும் ஏதேனும் ஒரு பொருள் குறித்து இலக்கிய விவா தம் நடத்தி வருகிறது. ஆகஸ்டு மாதம் அது எடுத்துக் கொண்ட பொருள் தொல் காப்பியர் காலம் பற்றியது. இதில் தமி ழண்ணல் உள்ளிட்ட பல அறிஞர் பெரு மக்கள் பங்கேற்று தத்தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார்கள்.

கி.மு.711 தான் தொல்காப்பியம் எழுந்த ஆண்டு என்கிறார் தமிழண் ணல். முனைவர் க.நெடுஞ்செழி யனோ தொல்காப்பியம் ரிக்வேதத்திற் கும் முந்தியது என்கிறார். அது அப் படியல்ல என்று வாதிட்டிருக்கிறார் பத் திரிகையாளர் கே.சி. லட்சுமி நாராய ணன். இவர்களுக்குள் இப்படி வேறு பாடு இருந்தாலும் ஓர் ஒற்றுமை தெரி கிறது. அதாவது தொல்காப்பியமானது சங்க இலக்கியத்திற்கும் முந்தியது என்கிறார்கள்.

சங்க இலக்கியம் பிறந்த காலம் கி.மு.200 முதல் கி.பி.200க்கு இடைப் பட்ட காலம் என்பது பொதுவாக வர லாற்றாளர்கள் கூறுவது. தமிழாசிரி யர்கள் எப்போதும் இதை இன்னும் முந் திய காலத்தது என்றே கூறி வரு கிறார்கள். தொல்காப்பியத்தையோ அதற்கும் முந்திக் கொண்டு போய் நிறுத்துகிறார்கள். வெள்ளைவாரணர் கி.மு.5,320 என்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! மனித நாகரிகம் திட்டவட்டமான வடிவெடுப்பதற்கு முன்பே தொல்காப்பியம் பிறந்துவிட் டது என்று சொல்கிறவர்களோடு எப்படி வாதிடுவது?

இது ஒரு புறமிருக்க, தினமணி விவாதத்தில் வந்த பொதுக் கருத்துக்கு வருவோம். சங்க இலக்கியத்திற்கும் முந்தியது தொல்காப்பியம் என்பது அது இதற்கு இவர்கள் யாரும் கல் வெட்டு ஆதாரமோ, செப்பேட்டு ஆதா ரமோ தரவில்லை. அப்போது இந்தச் சரித்திரச் சான்றுகளுக்கு வாய்ப் பில்லை. இந்த இலக்கியங்களின் அகச்சான்று மற்றும் மொழியியல் ஆகியவற்றைக் கொண்டுதான் காலத்தை நிறுவ வேண்டியுள்ளது.

மொழியியலைப் பொறுத்தவரை - குறிப்பாக இலக்கணவியலைப் பொறுத்தவரை - தமிழாசிரியர்கள் விதவிதமான விளக்கங்கள் தரலாம். அதிலே கருத்து வேறுபாடுகளுக்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால் அகச் சான்று எனப்படுவதற்கு - இந்த இலக்கி யங்கள் காட்டும் சமூக வாழ்வு எனப் படுவதற்கு - ஆளாளுக்கு வியாக் கியானங்கள் தந்துவிட முடியாது. இதிலே திருகல் வேலைகளுக்கு வாய்ப்பு குறைவு.

லட்சுமி நாராயணன் புத்திசாலித் தனமாக இந்த ஆதாரத்திற்குள் புகுந்து வருகிறார். இதை நெடுஞ் செழியனால் முறையாக எதிர்கொள்ள முடியவில்லை. தொல்காப்பியத்திற்கு பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் தந் துள்ளார். அதில் “நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான்” தலைமையில் இந்த நூல் அரங்கேற்றப்பட்டது என்று வருகிறது. அதாவது நான்கு வேதங் கள் கற்ற ஆதங்கோட்டு ஆசான் அப் போதே இருந்தான், அவன்தான் இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கினான். அப்படியென்றால் தொல்காப்பியர் காலத்திலே வருணாசிரமம் இங்கே வேரூன்றியிருந்தது என்று அர்த்தம். எனவே நிச்சயமாக இது வேதங் களுக்கு பிந்திய காலத்துப் படைப்புத் தான்.

இதற்கு பதில் சொல்லப் புகுந்த க.நெடுஞ்செழியன் “நான்மறை என்ப தற்கு மூலமறை” எனப்பொருள் கொள்ள வேண்டும் என்கிறார். இது சற்றும் பொருந்தி வரவில்லை. நான் மறை என்பது பிராமணிய மதத்தின் நான்கு வேதங்களைக் குறிப்பது என் பதற்கு தமிழ் இலக்கியங்களில் எத் தனையோ உதாரணங்கள் உள்ளன.

இதைவிட முக்கியம் தொல்காப்பி யம் பொருளதிகாரத்தில் வருகிற “அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” என் கிற சூத்திரத்தை லட்சுமி நாராயணன் சிக்கெனப் பிடித்திருப்பது. இதற்குப் பதிலே சொல்லவில்லை க.நெடுஞ் செழியன். அதற்குப் பதிலாக மொழியி யலுக்குள் புகுந்து கொண்டு ஏதோ சித்து விளையாட்டு காட்டுகிறார்.

தொல்காப்பியர் காலத்திலே தமிழ் கூறும் நல்லுலகில் வருணாசிரம சமூக வாழ்வு நிலைபெற்றுவிட்டது. பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் எனும் அந்த வருணப் பிரிவு தெளிவான, திட்டவட்டமான வடிவம் எடுத்துவிட்டது. இதற்கான ஆதாரம் தான் அந்தச் சூத்திரம். “அறுவகைப் பட்ட பார்ப்பனர்ப் பக்கமும், ஐவகை மர பின் அரசர் பக்கமும், இருமூன்று மர பின் ஏனோர் பக்கமும்...” எனத் துவங்கி “என்மனார் புலவர்” என்று அது முடி கிறது.

தனது “தொல்காப்பியப் பூங்கா” நூலில் தமிழக முதல்வர் கலைஞர் இதன் சாரத்தை இப்படித் தெளிவாகக் கூறியிருக்கிறார் -’’ என்மனார் புலவர் என்று, புலவர்கள் என்று கூறுவார்கள் எனக் குறிப்பிடுவதி லிருந்தே ஆரியர் வரவும், அவர்கள் புதிதாக வகுத்த தமிழர்க்குப் புறம்பான மரபும் தொல்காப்பியர் வாழ்ந்த காலத் தில் அல்லது அவர் தோன்றுவதற்கு முன்பு நம் நிலத்தையும் இனத்தையும் வளைத்துவிட்டன என்பது தெளிவாகும்.”

நாம் இங்கு எழுப்புகிற கேள்வி, இப்படித் தமிழ்ச் சமுதாயம், வருணா சிரமமயமாகி இருந்ததுதான் தொல் காப்பியர் காலம் என்றால் அது வேத காலத்திற்குப் பிந்தியது என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்? கூடவே நாம் எழுப்புகிற மற்றொரு கேள்வி, இத்தகைய திட்டவட்டமான வருணாசிரம வாழ்வைச் சங்க இலக்கி யங்கள் காட்டாத போது தொல்காப்பிய மானது அவற்றுக்குப் பிந்திய படைப் பாகத்தானே இருக்க வேண்டும்?

சங்க இலக்கியத்திலேயே அந்த ணர் வந்துவிட்டார், வேள்விமுறை வந் துவிட்டது, நான்மறை பேசப்படுகிறது, பல்யாக சாலை முதுகுடுமிப் பெரு வழுதி வந்துவிட்டான் என்பதெல்லாம் உண்மையே. ஆனால், “வைசிகன் பெறுமே வாணிப வாழ்க்கை” என்று நால் வருணத்தின் ஒரு முக்கிய கூறை அதே சொல்லாட்சியோடு நாம் காண் பது தொல்காப்பியத்தில் அல்லவா!

“மறையோர் தேடுத்து மன்றல் எட்டனுள் துறையமை நலயாழ்த் துணைமையோர் இயல்பே” என்று வருவது இன்னும் கூர்ந்து கவனிக்கத் தக்க விஷயம். பிராமணியம்தான் எட்டு வகைத் திருமண முறைகளைக் கொண்டிருந்தது. அதாவது பிரமம், பிசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந் தருவம், அசுரம், ராட்சசம், பைசாசம் எனும் எட்டு வகை. இதையெல்லாம் தொல்காப்பியர் தெரிந்து வைத்துக் கொண்டு பேசுகிறார் என்றால் அது காலத்தல் பிந்தியது என்பதை உணர்த்தவில்லையா?

அதனால்தான் இந்தச் சூத்திரத் திற்கு உரை எழுதிய வெள்ளை வாரன்னார் “தொல் காப்பியனார் காலத்தே வடவர் நாகரிகம் தமிழகத் தில் மெல்ல மெல்லப் பரவத் தலைப் பட்டமையால் மறையோர் தேஎத்து மணமுறைக்கும் தென்றமிழ் நாட்டு மணமுறைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளங்க உணர்த் தல் அவரது கடனாயிற்று” என்றார். இது கலைஞர் எடுத்துக் காட்டும் மேற்கோள்.

அப்படியென்றால் இப்படித் தமிழ்ச் சமுதாயம் வருணாசிரம மயமான காலம் சங்க காலத்திற்கு முந்தியதா, பிந்தியதா? முந்தியது என்றால் சங்க இலக்கியத்தில் இந்தத் திட்டவட்ட மான வருணாசிரம வாழ்வு இல்லா மல் போனது ஏன்? அப்போது மட்டும் அது மறைந்து, பின்னர் அது மீண்டும் தலையெடுத்ததோ? ஏற்கவியலாத சரித்திர முரண். சங்க காலத்திற்கும் பிந்தியதே தொல்காப்பியம், சங்க காலத்திலேயே வந்துவிட்ட வருணா சிரம வாழ்வு தொல்காப்பியர் காலத் தில் இன்னும் திட்டவட்டமான வடிவு எடுத்தது என்று முடிவுகட்டுவதே சரித்திர நியாயமாக இருக்கும்.

இதைவிடுத்து தொல்காப்பியத் திற்கு செயற்கையாகக் கூடுதல் வயது கொடுப்பது அதைப் புரிந்து கொள்ள வும் உதவாது, சங்க இலக்கியத்தை அறிந்து கொள்ளவும் உதவாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக