சனி, 25 செப்டம்பர், 2010

தமிழ் அறிய 400 மைல்கள் நடந்தவர்

தமிழின் உதரத்தில் (வயிற்றில்) பிறந்ததுதான் கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும் எனச் சொல்வதற்கு அடிப்படை அமைத்துத் தந்தவர் கால்டு வெல், பிராமணர்களுக்கு எதிரான இயக்கத்திற்குக் கால்கோள் செய்தவர் என்றாலும இவர் கால்டுவெல் ஐயர் என்றே அறியப்பட்டார். சமூகத்தில் இந்து சமயக் கோயில்களின் அடையாளம் ஐயர் என கருதப்பட்டதால் கிருத்தவக் கோயில்களில் உயர் நிலையைப் பெற்றிருந்தவரும் ஐயர் எனப்பட்டார்.

பிராமணர்கள் சமஸ்கிருதத்தின் வழி இறை வழிபாடு செய்து அந்த மொழிக்கு உரிமை கொண்டாடினர். அந்த மொழி தான் ஆண்டவனுக்குப் புரியும் என்றனர். ஆலயங்கள் அனைத் தையும் சமஸ்கிருதமயமாக்கினர். இங்கு ‘தமிழிலும்’ அர்ச் சனை செய்யப்படும் என்று மக்களின் மொழியை இரண்டாம் தரமாக்கினர். ஆனால் ஐயர் என்ற சொல்லைப் பெயரோடு ஒட்டிக் கொண்டாலும் அயர்லாந்து நாட்டில் பிறந்து ஸ்காட் லாந்தில் வளர்ந்தவர் என்றாலும், கிருத்தவ தேவாலயங்களில் பைபிள் எனும் வேதாகமம் தமிழில் தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பைபிளைத் தமிழாக்கம் செய்யும் பன்னிருவர் குழுவில் முதன்மையானவராய்த் திகழ்ந்தார். மக்களின் உணர்வுகளோடு ஒன்றிக் கலக்க வேண்டுமானால் சொல்ல வேண்டியதை அவர்தம் தாய்மொழியில் சொல்ல வேண்டும் என்பதற்குக் கால்டு வெலின் செயல் சிறந்த முன் மாதிரியாகும்.

1824 ஆம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி வடக்கு அயர்லாந்தில் உள்ள கிளாடி என்ற சிற்றூரில் பிறந்த ராபர்ட் கால்டுவெல், ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பை முடித்தார்.

உலகச் செம்மொழிகளில் ஒன்றான கிரேக்கம் பற்றி சர்டேனியல் செயின்ட் போர்டிடம் பயின்ற போது ஒப்பிலக்கண ஆய்வு நெறியையும் கற்றுக் கொண்டார். பின்னர் லண்டன் மாநகர் சமயத் தொண்டர் சங்கத்தின் ஆதரவுடன் கிருத்தவ நெறிபரப்பத் தமிழகம் புறப்பட்டார்.

கப்பலில் பயணம் செய்த நான்கு மாதகாலத்தில் பிரௌன் என்பாரிடம் ஆரி யம் (சமஸ்கிருதம்) பயின்றார். இத்தகைய அடித்தளத்துடன் 1838 ஆம் ஆண்டு 24 வது வயதில் சென்னைத் துறைமுகம் வந்து சேர்ந்தார் கால்டுவெல்.

இதன்பிறகு தான் அவரது வாழ்க்கையின் சுவாரசியமும், அர்த்தமும் தொடங்கு கிறது. தமிழ் பற்றியும் தமிழகம் பற்றியும் ஓரளவு தெரிந்திருந்த அவர், பேரளவு தெரிந்து கொள்ள விரும்பினார்.

இந்த விருப்பம் நிறைவேற சென்னை நகரிலிருந்து நெல்லைச் சீமை வரை நானூறு மைல் (720 கி. மீ) தூரம் நடந்தே செல்லத் துணிந்தார். இந்த நெடும் பய ணம் அவருக்குத் தமிழக மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, தமிழின் பல்வகை வழக்காறுகள் பற்றி அறிய உதவியது.

தஞ்சைத் தரணியின் நிலவளமும், தரங்கம் பாடியின் கடல் வளமும், நீலகிரி யின் மலைவளமும் அறிந்த கால்டுவெல் ஓராண்டு காலத்திற்கு பின் திருநெல் வேலியை அடைந்தார். சமயத் தொண்டு செய்தாலும் தமிழ் மொழிக்கு என்றும் புகழ் சேர்க்கும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் படைத்தளித்தார்.

என்றாலும் இந்த நூலுக்கான முன்னுரையில் தமிழ் இலக்கியங்களின் காலம் குறித்து தெரிவித்துள்ள கருத்தை ஆய்வாளர்கள் உலகம் ஏற்கவில்லை என் பதையும் உணர்தல் வேண்டும், திருக்குறளின் காலம் கி.பி பத்தாம் நூற்றாண்டு என்பது அவரின் கருத்தாக இருந்தது. இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முந்தைய துவக்க கால ஆய்வில் பிசிறுகள் இருப்பது இயற்கைதானே!

அயர்லாந்தில் பிறந்தவர் என்றாலும் நெல்லை பூமியை அயல்நாடு என்று கருதாமல் 1891 ஆம் ஆண்டு மரணத்தைத் தழுவும் வரை அரை நூற்றாண்டு காலம் தமிழையே தனது தாய் மொழியாகவும் ஏற்றுக் கொண்டவர் கால்டுவெல். இதனால் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்ற தருணத் தில் மே-7, 2010 அன்று 4 மொழிகளின் பின்னணியுடன் அவருக்குத் தபால்தலை வெளியிடப்பட்டது பொருத்தமாகவே அமைந்தது எனலாம்.
- மயிலைபாலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக